தொடரும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமேஸ்வரம்: கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த 13 ஆம் தேதி காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 15 பேர் மீன் பிடிக்க சென்றனர்.

கடந்த 14 ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் , எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 15 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
21 மீனவர்கள் கைது: இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் சிறை பிடித்தனர்.
மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களின் கிராமங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
தொடர் அட்டூழியம்: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து விட்டு விடுவிக்க மறுப்பதால் மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அத்துமீறி கைது செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருந்தாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து கொண்டிருப்பது மீனவர்களுக்கு பெரும் வேதனையை கொடுத்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications