கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவல்... ராமநாதபுரத்தில் கண்காணிப்பு தீவிரம்
ராமநாதபுரம்: இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பாம்பன் ரயில் பாலம், ரயில் நிலையங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கர்நாடக காவல்துறை சார்பில், தமிழக காவல்துறைக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலையடுத்து பாம்பன் ரயில், தரைவழி பாலங்களில் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், தடயவியல் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. பாம்பன் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் சென்று திரும்பும் வாகனங்கள் ராமநாதபுரம் வழியாக செல்ல வேண்டும் என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் கூடுதல் நேரம் நிறுத்தி, மக்கள் பயணிக்கும் அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் சோதனையிட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் போலீசார், ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் தங்குவோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான அரசு மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகே, பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications