கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவல்... ராமநாதபுரத்தில் கண்காணிப்பு தீவிரம்
ராமநாதபுரம்: இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பாம்பன் ரயில் பாலம், ரயில் நிலையங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கர்நாடக காவல்துறை சார்பில், தமிழக காவல்துறைக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலையடுத்து பாம்பன் ரயில், தரைவழி பாலங்களில் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், தடயவியல் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. பாம்பன் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் சென்று திரும்பும் வாகனங்கள் ராமநாதபுரம் வழியாக செல்ல வேண்டும் என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் கூடுதல் நேரம் நிறுத்தி, மக்கள் பயணிக்கும் அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் சோதனையிட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் போலீசார், ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் தங்குவோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான அரசு மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகே, பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications