பேசாத காதலி.. கெஞ்சியும் பலன் இல்லை.. செல்பி எடுத்து அனுப்பி விட்டு தூக்கில் தொங்கிய காதலன்
காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்: எவ்வளவோ கெஞ்சி பார்த்தாச்சு... பேசவே இல்லை.. அதனால் தூக்கு மாட்டிய செல்பியை காதலிக்கு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்து கொண்டார் காதலன்.
ராமநாதபுரம் மாவட்டம் குருவாடி அருகே அவத்தாண்டை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி ராஜா. 24 வயதான ராஜா, தனியார் என்ஜினீயரிங் காலேஜில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இவர் 4 வருஷமாக தனது சொந்தக்கார பெண் ஒருவரை லவ் செய்து வந்தார். அந்த பெண்ணும் ராஜாவை உயிருக்கு உயிராக விரும்பினார்.

மனவேதனையில் ராஜா
ஆனால் விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. ஆனால் மகளை கண்டித்தனர். வீட்டுக்கு பயந்த அந்த பெண்ணும், கொஞ்ச நாளாக ராஜாவிடம் பேசவில்லை. இதனால் மனவேதனைப்பட்ட ராஜா எவ்வளவு முயற்சி எடுத்து அந்த பெண்ணிடம் பேச பார்த்தும் முடியவில்லை. இந்த வருத்தத்தினால் மற்றவர்களிடமும் பேசாமலேயே ஒதுங்கினார்.

வாழவே பிடிக்கல
இந்நிலையில், விளாத்திகுளத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்தவர், கடந்த மாதம் 28-ம் தேதியிலிருந்து காணாமல் போய்விட்டார். பின்னர் திடீரென தன் அண்ணனுக்கு போன் செய்த ராஜா, "எனக்கு இந்த உலகத்தில் வாழவே பிடிக்கல, அதனால தற்கொலை செய்துக்க போறேன்" என்று சொல்லிவிட்டு போனையிம் கட் பண்ணிவிட்டார்.

செல்போன்
உடனே அவரது அண்ணன் இதுசம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் ஒரு பக்கமும், சொந்தக்காரர்கள் ஒரு பக்கமும் ராஜாவை தேடினார்கள். அப்போது விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பிணமாக தூக்கில் தொங்கிய ராஜாவை கண்டெடுத்தனர். அவரது பாக்கெட்டிலிருந்து ஒரு செல்போனை போலீசார் எடுத்தனர்.

அழுகிய உடல்
ராஜாவின் உடல் ரொம்பவும் அழுகி இருந்தது. பின்னர், அதனால் அந்த இடத்திலேயே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ராஜாவின் செல்போனில், தற்கொலை செய்யும் முன்பாக ஒரு செல்பி எடுத்திருக்கிறார். அதாவது அவர் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு கடைசியாக எடுத்த செல்பி அது. அதை காதலியின் தோழிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தன்னுடன் காதலி பேசாததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

கதறி அழுதனர்
ஆனால் இப்படி கழுத்தில் தூக்கு போட்டு கொண்டு அனுப்பிய செல்பியை பார்த்து அந்த தோழி, ராஜா விளையாட்டுக்கு இப்படி செய்கிறார் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதனால்தான் இதை அவரும் யாரிடமும் சொல்லாமல் இதை விட்டுவிட்டிருக்கிறார். ராஜாவின் அழுகிய உடலை கண்டு, அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications