விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்மச்சாவு.. போலீஸ் மீது உறவினர்கள் பகீர் புகார்.. பரபரப்பு!
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அவரை அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Recommended Video
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிது.

மர்மமான முறையில் உயிரிழந்தார்
இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று மடக்கிபிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை முடிந்து மணிகண்டன் வீடு திரும்பினார். ஆனால் சிறிது நேரத்தில் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அடித்துக் கொலை?
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணிகண்டனை போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். போலீசார் தரப்பில் பாம்பு கடித்து அவர் இறந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அதை உறவினர்கள் ஏற்க மறுத்த நிலையில் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

போலீசார் குவிப்பு
இளைஞரின் உடல் பிரேதே பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான் பிரிட்டோ,மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு டிஎஸ்பி திருமலை ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

சாலை மறியல்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மர்மமான முறையில் இறந்த மணிகண்டனின் உறவினர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அதனடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததனர். அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications