10 நாளில் 12 பேர்.. சவுதியில் மீண்டும் தலைதூக்கிய தலை துண்டிப்பு மரண தண்டனை.. வெளியான ஷாக் தகவல்
ரியாத்: சவுதி அரேபியாவில் வாளால் தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும் சம்பவம் மீண்டும் அதிகரித்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 நாளில் மட்டும் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் பலருக்கும் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில நாடுகளில் குற்றவாளிகளுக்கான தண்டனை என்பது மிகவும் பயங்கரமாக உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் குற்றம் செய்பவர்களுக்கு பொது வெளியில் தண்டனை வழங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக சவுதி அரேபியாவில் தலை துண்டித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறை இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சவுதி அரேபியாவுக்கு எதிர்ப்பு
இந்தியா உள்பட பல நாடுகளில் மரண தண்டனையை நிறைவேற்றவே பல நாடுகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் தலை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர். ஐநா மனித உரிமைகள் அமைப்பும் சவுதி அரேபியாவுக்கு எதிராக கருத்துகளை கூறியது. தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றுவதை கைவிட வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டது.

மரண தண்டனை மறுபரிசீலனை
இதனால் சவுதி அரேபியாவில் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றம் செய்வதும், மரண தண்டனை பெற்றவர்களுக்கு ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது பற்றியும் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதோடு மரண தண்டனை வழங்கும் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொலை, கொள்ளை, போதைபொருள் கடத்தல் உள்ளிட்ட சில குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

12 பேருக்கு மரண தண்டனை
இந்நிலையில் தான் தற்போது சவுதி அரேபியாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களுக்காக கடந்த 10 நாட்களில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர், சிரியாவை சேர்ந்த 4 பேர், ஜோர்டானை சேர்ந்த 2 பேர், சவுதி அரேபியாவை சேர்ந்த 3 பேர் அடங்குவர்.

தலை துண்டிப்பு
இந்த 12 பேரில் சிலரது தலையை வாளால் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சவுதி அரேபியாவில் கொலை குற்றவாளிகள், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பயங்கரவாதிகள் என மொத்தம் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தான் தற்போது தலை துண்டித்து மரண தண்டனை நிறைவற்றியது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications