சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம்
ரியாத்: சவுதி அரேபியாவின் (Saudi Arabia) முக்கிய தொழிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ளது. அதற்கு செக் வைக்கும் வகையில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப்பாதையை மூடியுள்ளது. இதனால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு சிக்கல் வந்துள்ளது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்திக்கு பதிலாக செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இருப்பினும் அங்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவையும், ஈரான் தாக்கி வருகிறது.
சவுதி அரேபியாவில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. அமெரிக்காவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் உள்ளது. இந்த இடத்தை குறிவைத்து ஈரான் தாக்கி உள்ளது. இது சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது.

சவுதி எண்ணெய் நிறுவனம்
அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆலையான சவுதி அரோம்கோ நிறுவனம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த ஆலை உற்பத்தியை நிறுத்தியுள்ளது. அதோடு, ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் நீர்வழிப்பாதையை மூடுவதாக அறிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து பாதிப்பு
இஸ்ரேல் - அமெரிக்காவின் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையை மூடுவதாகவும், மீறி இந்த வழிப்பாதையில் கப்பல்கள் வந்தால் தாக்குதல் நடத்துவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் வளைகுடா கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெயில் முன்னிலை
குறிப்பாக கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகளில் அமெரிக்காவின் விமானப்படை தளம், கடற்படை தளங்கள் உள்ளதால் ஈரான் தொடர்ந்து தாக்கி வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் இந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன.
ஏற்றுமதியில் சிக்கல்
இந்த நாடுகளின் கச்சா எண்ணெய்கள் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பாதை வழியாக தான் இந்தியா, சீனா உள்பட பிற ஆசிய நாடுகளுக்கு வரும். தற்போது ஈரான் அதனை மூடியுள்ளதால் அந்த நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் தான் முக்கிய வருவாய் ஆதாரம். தற்போது ஈரான் அதனை முடக்கி உள்ளது.
செங்கடல் வழியாக...
இப்படியான சூழலில் தான் சவுதி அரேபியா மாற்று முடிவை எடுத்துள்ளது. அதாவது ஈரானின் ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.
செங்கடல் பகுதியில் ஏமனின் ஹவுதிகளின் ஆதிக்கம் உள்ளது. இந்த ஹவுதிகள் ஈரானின் ஆதரவாளர்களாக உள்ளன. செங்கடல் பகுதியில் செல்லு இஸ்ரேல், அமெரிக்க வர்த்தக கப்பல்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்கி வருகின்றன. இதற்கிடையே தான் சவுதி அரேபியா செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே ஹவுதிகளால் சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்களுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
-
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
சாத்தான் சிலையை ஏன் எரிச்சீங்க.. யூதர்களின் ஆணிவேரைச் சீண்டிய ஈரான்.. இஸ்ரேல் கொதிக்க காரணம்! -
அமெரிக்க போர் விமானங்களை விரட்டிவிட்ட ஸ்பெயின்.. ஈரானை தாக்க அனுமதி மறுப்பு.. டிரம்புக்கு அவமானம் -
இந்திய போர்க்கப்பல்களும் என்ட்ரி.. மத்திய கிழக்கில் வலம் வருவது ஏன்? உக்கிரமாகும் ஈரான் போர் -
போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல் - அமெரிக்காவின் பக்கம் சாய்ந்த மோடி? இதை கவனிச்சீங்களா -
உச்சமடைய போகும் பெட்ரோல் - டீசல் விலை.. ஈரான் போரால் பெரிய ஷாக்.. பின்னணியில் 2 காரணம்.. போச்சே -
அமெரிக்கா குண்டு போட்டது ஈரான் மேல இல்ல.. தங்கத்து மேல! மார்க்கெட் எப்படி அதிர போகுதுனு பாருங்க! -
துபாய் மீது கொடூர தாக்குதல்.. ஈரானை தாக்க இஸ்ரேல் – அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அமீரகம்? பின்னணி -
ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்: நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி அடியோடு பாதிப்பு! 2 கோடி முட்டைகள் தேக்கம்! -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
ஈரானை தாக்க சொன்னதே சவுதி தான்.. டிரம்புக்கு, பட்டத்து இளவரசர் கொடுத்த அழுத்தம் – ஷாக் தகவல் -
கியாஸ் தட்டுப்பாடு வந்திடுச்சி.. இந்தியாவுக்குபுது தலைவலி.. ஈரானால் கைவிரித்த கத்தார்! சிக்கல் -
ஈரான் தலைவர்களை தட்டித் தூக்க.. இஸ்ரேல் மொசாட்டின் ‘ஸ்கெட்ச்’.. பற்களில் Spy சிப்? கேமரா ஹேக்கிங்? -
ஈரான் மாதிரியே.. டிரம்ப் அடுத்த டார்கெட் வட கொரியா? கிம் ஜாங் உன் கையில் எடுக்கும் புது வியூகம்? -
ஈரான் கடல் பகுதியில் சிக்கிய தமிழக மீனவர்கள்! நிலைமை என்ன? கன்னியாகுமரி மக்கள் அச்சம்!














Click it and Unblock the Notifications