வீட்டை பூட்டி தீ வைத்து.. தாத்தா பாட்டியை எரித்துக் கொன்ற 16 வயது பேரன்.. நடுங்கிப்போன சேலம்!
சேலம்: ஆத்தூர் அருகே 16 வயது சிறுவன் வீட்டை பூட்டி தீ வைத்து தாத்தா பாட்டியை எரித்து கொன்ற பகீர் சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் வசித்தது வருபவர்கள் காட்டுராஜா (75) தாய் காசியம்மாள் (65) தம்பதியினர்.
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் முதலாவது மகன் நல்ல செல்வ செழிப்புடன் உள்ளார்.
இதேபோல் காட்டுராஜா-காசியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகனும் நல்ல செழிப்பான நிலையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது மூன்றாவது மகன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மூன்றாவது மகனுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். முதல் மகன் குடும்பத்துடன் ஒப்பிட்டு, மூன்றாவது மகன் குடும்பத்தை காட்டுராஜாவும், காசியம்மாளும் அவ்வப்போது தரக்குறைவாக பேசி வந்தததாக கூறப்படுகிறது. பாட்டி-தாத்தா நமது தந்தையையும், குடும்பத்தையும் தவறாக பேசுகிறார்களே என்று மூன்றாவது மகனின் மகன் 16 வயது சிறுவன் அடிக்கடி வருத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காட்டுராஜா, தாய் காசியம்மாள் தம்பதியினர் தகர கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பேரனான அந்த 16 வயது சிறுவன் வீட்டின் வெளியே பூட்டி தீ வைத்துள்ளார். இதில் வெளியே வரமுடியாதபடி வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட காட்டுராஜாவும், காசியம்மாளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். வீடு தீப்பற்றி எரிந்தவுடன் அக்கம்பக்கத்தினர் உடன்டியாக ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பரில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, காட்டுராஜா , தாய் காசியம்மாள் தம்பதியினர் பிணமாக கிடந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவன் 'தாத்தா, பாட்டி தன்னையும், தனது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசியதால், வேதனை அடைந்து வீட்டை கொளுத்தியதாக போலீசாரிடம் கூறி இருக்கிறான். பேரனே தாத்தா, பாட்டியை எரித்து கொன்ற சம்பவம்கொத்தாம்பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications