போராடும் சேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்த பின் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி
Recommended Video
சேலம்: சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 35 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை இன்று பாஜக தமிழக பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், "சேலம் உருக்காலை குறித்து மத்திய எக்கு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தினோம் அப்போது அவர், சேலம் உருக்காலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மூலப்பொருட்கள் விலையை குறைத்து நட்டத்தை குறைக்கவும், விற்பனை பிரிவை தனியாக பிரிக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், தொழிலாளர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் வேலை இழப்பு ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்.
உருக்காலை நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக தொழில்துறை அமைச்சரிடம் உருக்காலை பங்குகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியுள்ளோம். கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாள் பிரச்சினை குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது" இவ்வாறு கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications