பண மோசடி புகார்:அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.10-க்கு ஒத்திவைப்பு!
சேலம்: ரூ76.5 லட்சம் பண மோசடிப் புகாரில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது மீதான விசாரணையை வரும் 10-ந் தேதிக்கு நாமக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. இவருடைய உதவியாளராக இருந்தவர் சேலம் ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன்.

பண மோசடி புகார்
குணசீலன் அண்மையில் ராசிபுரம் போலீசில் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், சத்துணவு பணியாளர், அங்கன்வாடி பணியிடங்கள் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தர பொதுமக்களிடம் பணம் வசூலித்தேன். இந்த பணம் ரூ76.5 லட்சம் முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை.

போலீஸ் விசாரணை
இதனால் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் கேட்டனர். இது தொடர்பாக சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சனிடம் நான் கேட்ட போது, பணத்தை தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். ஆகையால் முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் இருந்து பொதுமக்களுக்கு தர வேண்டிய ரூ76.5 லட்சத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார் குணசீலன். இது தொடர்பாக சேலம் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் அம்பிகாபதி சில நாட்களாக விசாரணை நடத்தினார்.

மாஜி அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு
இந்த விசாரணையில் மொத்தம் 15 பேரிடம் ரூ76.5 லட்சம் பணம் பெற்று சரோஜாவும் அவரது கணவரும் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் மோசடிகள் தொடர்பான 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் முன்னாள் அமைச்சர் சரோஜா கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

முன் ஜாமீன் கிடைக்குமா?
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜாவும் அவரது கணவர் லோகரஞ்சனும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் இன்று விசாரணை நடத்தினார். இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications