Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்.. 5 லிட்டர் ஆசிட்டை ஊற்றி.. மனைவியை கொன்ற கொடூரன்.. மாமியாரையும் விடலை.. சேலத்தில் பரபரப்பு..!

மனைவி மீது ஆசிட் வீசிய கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சேலம்: குடும்பத் தகராறு காரணமாக மாமியார் மற்றும் மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றிக் கொல்ல முயன்ற நபரை சேலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் இயேசுதாஸ்.. 50 வயதாகிறது.. இவரது மனைவி ரேவதி.. 47 வயதாகிறது.. நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்தவர் ரேவதி.. கல்யாணம் ஆகி 20 வருடங்கள் ஆகிறது..

இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இயேசுதாசுக்கு ரேவதி மீது சந்தேகம்.. இதனால், ரேவதிக்கும், யேசுதாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்து போகுமாம்..

 சமாதானம்

சமாதானம்


எப்போது தகராறு நடந்தாலும், இவர்களை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சமாதானம் செய்துவைத்து விட்டு போவார்களாம்.. ஆனாலும் மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் தீரவில்லை.. ஒருகட்டத்தில் சந்தேகம் அதிகமாகி அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது... இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரேவதி, அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

 புகார்

புகார்

இந்த நிலையில் ரேவதியும் அவரது அம்மா ஆராயி என்பவரும், இயேசுதாஸ் மீது சேலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் புகார் கொடுக்க சென்றனர்.. பிறகு, சேலம் டவுனில் உள்ள மகளிர் ஸ்டேஷனிலும், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக ரேவதி புகார் செய்தார்.. இந்த புகார்களை தந்துவிட்டு, ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

 சிகிச்சை

சிகிச்சை

அப்போது அவர்களின் பின்னாடியே, இயேசுதாஸ் வந்தார்.. திடீரென தான் மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து, ரேவதி மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடினார்.. மொத்தம் 5 லிட்டர் ஆசிட் இருக்குமாம்.. அது அப்படியே ரேவதியின் முகம், மற்றும் மார்பு பகுதியில் கொட்டி வெந்தது.. இதனால் வலியால் ரேவதி அலறி துடித்தார்... இதை பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்து அவரை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அங்கு இப்போது ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

 முதலுதவி

முதலுதவி

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சேலம் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ரேவதி மீது வீசப்பட்ட ஆசிட், பக்கத்தில் வந்து கொண்டிருந்த மாமியார் மீதும் பட்டுவிட்டது.. இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.. அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, பிறகு போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்... ஆசிட்டை வீசிவிட்டு, இயேசுதாஸ் தப்பி ஓடிவிட்டார்.. அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.. சேலம் பஸ் ஸ்டாண்டில், பட்டப்பகலில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+