ஷாக்.. 5 லிட்டர் ஆசிட்டை ஊற்றி.. மனைவியை கொன்ற கொடூரன்.. மாமியாரையும் விடலை.. சேலத்தில் பரபரப்பு..!
மனைவி மீது ஆசிட் வீசிய கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்
சேலம்: குடும்பத் தகராறு காரணமாக மாமியார் மற்றும் மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றிக் கொல்ல முயன்ற நபரை சேலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் இயேசுதாஸ்.. 50 வயதாகிறது.. இவரது மனைவி ரேவதி.. 47 வயதாகிறது.. நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்தவர் ரேவதி.. கல்யாணம் ஆகி 20 வருடங்கள் ஆகிறது..
இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இயேசுதாசுக்கு ரேவதி மீது சந்தேகம்.. இதனால், ரேவதிக்கும், யேசுதாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்து போகுமாம்..

சமாதானம்
எப்போது தகராறு நடந்தாலும், இவர்களை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சமாதானம் செய்துவைத்து விட்டு போவார்களாம்.. ஆனாலும் மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் தீரவில்லை.. ஒருகட்டத்தில் சந்தேகம் அதிகமாகி அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது... இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரேவதி, அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

புகார்
இந்த நிலையில் ரேவதியும் அவரது அம்மா ஆராயி என்பவரும், இயேசுதாஸ் மீது சேலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் புகார் கொடுக்க சென்றனர்.. பிறகு, சேலம் டவுனில் உள்ள மகளிர் ஸ்டேஷனிலும், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக ரேவதி புகார் செய்தார்.. இந்த புகார்களை தந்துவிட்டு, ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சிகிச்சை
அப்போது அவர்களின் பின்னாடியே, இயேசுதாஸ் வந்தார்.. திடீரென தான் மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து, ரேவதி மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடினார்.. மொத்தம் 5 லிட்டர் ஆசிட் இருக்குமாம்.. அது அப்படியே ரேவதியின் முகம், மற்றும் மார்பு பகுதியில் கொட்டி வெந்தது.. இதனால் வலியால் ரேவதி அலறி துடித்தார்... இதை பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்து அவரை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அங்கு இப்போது ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

முதலுதவி
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சேலம் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ரேவதி மீது வீசப்பட்ட ஆசிட், பக்கத்தில் வந்து கொண்டிருந்த மாமியார் மீதும் பட்டுவிட்டது.. இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.. அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, பிறகு போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்... ஆசிட்டை வீசிவிட்டு, இயேசுதாஸ் தப்பி ஓடிவிட்டார்.. அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.. சேலம் பஸ் ஸ்டாண்டில், பட்டப்பகலில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications