அவங்க சொன்னாங்க செஞ்சாங்களா? அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்கலாம் -எடப்பாடி பழனிசாமி பளீர்

Subscribe to Oneindia Tamil

கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக, ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை எனவும், தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளதால் அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் என தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனு தக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோரும் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

இந்நிலையில் இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். நங்கவள்ளி, வனவாசி , ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்து பேசிய அவர், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.

திட்டங்களை நிறைவேற்றவில்லை

திட்டங்களை நிறைவேற்றவில்லை

கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஒரு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை எனவும் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வரும் கண்டுள்ளதால் அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் என பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தற்போது ஸ்டாலின் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை போல மாவட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக செல்லாமல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

புதிய திட்டங்கள் இல்லை

புதிய திட்டங்கள் இல்லை

திமுக ஆட்சிக் காலத்தில் எந்த புதிய திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்ற அவர், திமுகவினருக்கு கைவந்த கலையான வார்த்தை ஜாலங்கள் மூலம் தற்போது திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என பேசிய அவர் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் அதிமுகவினருக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தக்க பாடம்

தக்க பாடம்

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரசும்தான் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை தடுப்பதுதான் அதிமுக எனவும், நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக கூட்டணி என்றும் தற்போது அவர்கள் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டினார். இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது, பொங்கல் பரிசு உள்ளிட்ட திட்டங்களில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+