சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம்.. எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்: முன்னாள் முதல்வர்களான, மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு சேலத்தில் சுமார் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

2017 செப்டம்பரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், சேலம் நகரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச்சிலைகளுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

Edappadi Palanisamy inaugurates MGR statue in Salem

இதையடுத்து, சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ. 80 லட்சம் மதிப்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் அமைக்கும் பணி கடந்தாண்டு ஏப்ரல் 29ம் தேதி முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று பொதுமக்கள் பார்வைக்காக எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுடன் கூடிய மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மேலும், சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் எத்தனை கிராமங்களுக்கு சென்றார்? என்பதை சொல்லத் தயாரா. தேர்தல் வர இருப்பதால் ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்துகிறார்.

அதிமுக ஆட்சியில் எந்த நலனும் செய்யவில்லை என தவறான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள். யார் உண்மையாக உழைக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். எதிர்க்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+