நான் சொல்லித்தான்.. ஸ்டாலினுக்கு பதவி கொடுத்தார் கருணாநிதி.. திர வைக்கும் ராமதாஸ்
சேலம்: ''நான் சொல்லித்தான் ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார் கருணாநிதி'' என்று எடப்பாடி தொகுதியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
தி.மு.க.வுக்கு வாக்களித்தால், உங்களின் கதை முடிந்துவிடும், சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்
ராமதாஸ் வாக்கு சேகரிப்பு
தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சியை சேர்ந்த தலைவர்கள் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெண்களை கடவுளாக வழங்கும் மண்
அப்போத அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் கிளை செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, படிப்படியாக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியுள்ளார். அவருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். ஆக்கும், காக்கும், அழிக்கும் சக்தி பெண்களுக்கு உண்டு. பெண்களை, திரௌபதியை கடவுளாக வணங்கும் மண் இது. 2ஜி மூலம் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததாக சிறை சென்று விட்டு வந்தவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை பற்றி இழிவாக பேசுகிறார்.
ஸ்டாலின் துணை-முதல்வரானது எப்படி
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அமுதசுரபியாகும். பா.ம.க தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கானது. தி.மு.க தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டது. இந்த தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடுபவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். நான் சொல்லித்தான் ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார் கருணாநிதி. எடப்பாடி தொகுதியில் பெண்கள் ஓட்டு அதிகம்.
Recommended Video
தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர்கள்
வரம் கொடுத்த சிவனின் தலையிலேயே கையை வைத்து வரம் பெற்றவன் சோதிக்க முயன்றதை போல, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அழித்த கதைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். தி.மு.க.வுக்கு வாக்களித்தால், உங்களின் கதை முடிந்துவிடும், சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.