தேர்தல் களத்தில் திருப்பம்.. அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா திடீர் ஆதரவு.. காரணம் இதுதான்!
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சேலம்: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கிறது. அதேபோல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையும் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது.
இதற்கான விருப்பமனுக்களையும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பெற்றுவந்தார். அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம். தனியாக போட்டியிட போகிறோம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இந்த முடிவை தற்போது ஜெ.தீபா கைவிட்டுள்ளார்.

பேட்டி
அதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார். சேலத்தில் நடந்த பேரவை பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜெ. தீபா விளக்கம் அளித்துள்ளார்.

வருத்தம் அடைவார்கள்
அவர் தனது பேட்டியில், நான் தனியாக போட்டியிடுவது குறித்து பலர் என்னிடம் பேசினார்கள். தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருத்தம் கொள்வார்கள். அதிமுகவின் நிஜமான தொண்டர்கள் வருத்தம் அடைவதை ஏற்க முடியாது.

அழைப்பு
அதிமுக தலைமை என்னை அழைத்தால் நான் அழைப்பை ஏற்றுக்கொள்வேன். நான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. அதிமுகவின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

என்ன
எந்த பதவியும் எனக்கு தேவையில்லை; அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது. அதிமுகவுடன் எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையை வருங்காலத்தில் இணைக்க வாய்ப்புள்ளது, என்று ஜெ. தீபா தனது முடிவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications