என்னா மூளை! பிஸ்கெட் பாக்கெட்டில் ஓட்டை போட்டு கஞ்சா கடத்தல்! சேலம் மத்திய சிறை காவலர்கள் அதிர்ச்சி
சேலம்: சேலம் மத்திய சிறையில் பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை ஒளித்து வைத்து கொண்டு வந்த ஒரு பார்வையாளரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். சிறை நிபந்தனைகளுக்குள்பட்டு சிறை கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் சந்திப்பது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கவியரசு. இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர் சேலம் சிறைக்கு வந்திருந்தார்.
பொதுவாக சிறைக்கு வரும் கைதிகளை முழுவதுமாக சோதனை செய்து உள்ளே செல்லில் அடைப்பார்கள். இது அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் பிற கைதிகளின் பாதுகாப்பு கருதி இந்த சோதனை நடத்தப்படுகிறது.

அது போல் சிறை கைதிகளை பார்க்க வருவோர் கொடுக்கும் உணவு பொருட்கள், உடைகள் உள்ளிட்டவைகளையும் சோதனை செய்த பிறகே உள்ளே அந்த பொருட்களை சம்பந்தப்பட்ட கைதிகளிடம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் கவியரசுவிற்காக முகமது சுகில் பிஸ்கெட் கொண்டு வந்திருந்தார்.
அதை போலீஸார் சோதனையிட்ட போது அந்த பிரபல பிஸ்கெட் பாக்கெட்டின் சைஸும் தோற்றமும் வேறு மாதிரி இருந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அந்த பிஸ்கெட்டை ஸ்கேன் செய்த போது அதில் ஏதோ மர்ம பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை வைத்துக் கொண்டே அந்த பிஸ்கெட் பாக்கெட்டை போலீஸார் பிரித்தனர்.

அப்போது வட்டமான பிஸ்கெட்டின் நடு பகுதி உடைக்கப்பட்டு வெறும் வளையங்கள் மட்டுமே இருந்தது. அதில் கஞ்சாக்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து 80 கிராம் கஞ்சாவை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்து முகமது சுகிலை அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கஞ்சா பொருளை சுகில் எத்தனை முறை கொண்டு வந்திருக்கிறார். இதுதான் முதல்முறையா? இல்லை ஏற்கெனவே எத்தனை முறை கொண்டு வந்துள்ளார். எதில் மறைத்து வைத்து கொண்டு வந்தார். யாரிடம் இருந்து கஞ்சாவை வாங்கினார் போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கஞ்சாவை தவிர வேறு ஏதேனும் பொருள் உள்ளே கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு சிறைக்குள்ளேயே தைரியமாக பிஸ்கெட்டில் மறைத்துவைத்து கஞ்சாவை கொண்டு சென்ற நபர் குறித்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவியரசுவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications