மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு.. ஏமாற்றிய பருவமழை.. கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. பருவமழை குறைந்து போன நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவடைந்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று 1109 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்றே உயர்ந்து விநாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகவும் பாசனத்திற்காகவும் விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 52.50 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 51.95 அடியாக குறைந்தது. இதேநிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. வழக்கமாக பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய உடன் கேரளாவிலும் கர்நாடகாவிலும் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். கேரளா, கர்நாடகாவில் நடப்பாண்டு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்தாலும் தற்போது குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் நெற்பயிர்கள் பல இடங்களில் கருகத் தொடங்கியுள்ளன. ஆற்று நீரை நம்பியுள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கே தண்ணீர் இல்லாத நிலையில் சம்பா, தளாடி பயிர் சாகுபடியை எப்படி தொடங்குவது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கேரள மாநிலத்திலும் பருவமழை குறைவாக உள்ளதால் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமும் சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீரை நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications