எடப்பாடியின் நிகழ்ச்சியை புறக்கணித்த புதிய மா.செ. இளங்கோவன்.. பரபரக்கும் சேலம்! நடந்தது என்ன?
சேலம்: பதவியை விட்டுக் கொடுத்தவரின் விழாவையே புதிய மாவட்டச் செயலாளர் இளங்கோவன் புறக்கணித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சராகவும் இருந்தார்.
இதையடுத்து 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பிடித்தது. அப்போதும் அதே இலாகாவில் எடப்பாடி பழனிச்சாமி நீடித்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வராக பொறுப்பேற்றார்.

மாவட்டச் செயலாளர்
அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். அப்போது அவர் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் நீடித்தார். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது.

இணை ஒருங்கிணைப்பாளர்
இதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு கொடுத்தார். அப்போது மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவனும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு அளித்தார். இந்த நிலையில் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது நண்பரான இளங்கோவன் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு
11 ஆண்டுகளுக்கு பிறகு தனது பதவியை இளங்கோவனுக்கு எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. மேலும் எடப்பாடி ஆதரவாளர்கள் இளங்கோவனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்ததால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நிகழ்ச்சியில் ஈபிஎஸ்
இந்த நிலையில் கொங்கணாபுரத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் அதிமுகவின் இணை ஒருங்கிணைுப்பாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் மின்வெட்டு பிரச்சினையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி கொள்முதல்
நிலக்கரியை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை அரசு வழங்க வேண்டும்ய எனது வீட்டில் இன்று காலை 6 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. 8 மணிக்குத்தான் மின்சாரம் வந்தது. அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மின் தடை ஏற்படுகிறது என்றார்.

புறக்கணித்த இளங்கோவன்
இந்த விழாவில் அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரும் கட்சியின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான இளங்கோவன் விழாவைப் புறக்கணித்தது. அந்க கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். மேலும் எதற்காக இளங்கோவன் இப்படி செய்தார் என்பது குறித்தும் அவர்களுக்குள்ளாகவே விவாதித்து வருகிறார்கள்.

கொடநாடு விசாரணை
கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்திய போது கொடநாட்டில் என்னென்ன இருந்தன என்பது குறித்தெல்லாம் அவர் தகவல்களை அளித்ததாக தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமான இளங்கோவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தாரா இளங்கோவன் என்ற கேள்வி எழுகிறது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications