சாக்குப்பைக்குள் சிறுவனை கடத்திய வடமாநில மூதாட்டி கைது.. சேலம் அருகே பரபரப்பு
சேலம்: சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனின் வாயில் துணியை போட்டு அடைத்து சாக்குப் பைக்குள் போட்டு கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கர் நகர் அரசு மேல்நிலை பள்ளி அருகே வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்தார். அவர் அவ்வழியாக பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் பேச்சு கொடுத்தார்.

கையை பிடித்து இழுத்து
பாஷை புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த மூதாட்டி திடீரென சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார்.

கோணிப்பை
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து அடைத்து ஒரு கோணிப்பையில் போட்டு அடைத்தார். இதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து விட்டனர்.

போலீஸுக்கு தகவல்
பின்னர் அந்த மூதாட்டியை விரட்டி பிடித்து கோணிப்பையை திறந்து பார்த்தனர். அதில் சிறுவன் இருந்தான். இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

கைது
அவர்கள் வருவதற்குள் மூதாட்டியை போட்டு சரமாரியாக அடித்தனர். இதையடுத்து காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications