நீங்கள்தான் முன்வந்து நிலம் தர வேண்டும்.. அப்போதுதான் மாநிலம் வளரும்.. சேலத்தில் முதல்வர் பேச்சு!
அதி விரைவு சாலை அமைக்கும் பணிகளுக்கு மக்கள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சேலம்: அதி விரைவு சாலை அமைக்கும் பணிகளுக்கு மக்கள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தாரமங்கலத்தில் ரூ.24.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புற வழிச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். ஓமலூரில் இருந்து தாரமங்கலம் வழியாக சங்ககிரி செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் பயன்பாட்டிற்காக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலையை திறந்து வைத்து முதல்வர் பழனிச்சாமி சாலைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

என்ன சொன்னார்
முதல்வர் தனது பேச்சில், ஒரு மாநிலத்தின் தொழிற்துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சாலை வசதி சிறப்பாக இருக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதி சரியாக இருந்தால் அனைத்து விதமான வசதிகளையும் பெற முடியும்.

மக்கள் முன்வர வேண்டும்
மக்கள் முன்வந்து நிலம் அளித்தால்தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். தொழிற் வளர்ச்சி அடைய மக்கள்தான் அரசுக்கு உதவ வேண்டும். மக்களின் உதவி இருந்தால் மட்டுமே சாலைகளை அமைக்க முடியும்.

ஏன் முக்கியம்
சாலையை மேம்படுத்த பொதுமக்கள் மனமுகந்து, எந்த வருத்தமும் இல்லாமல் அரசுக்கு நிலம் தர வேண்டும். அப்போதுதான் சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தவிற்க முடியும். நல்ல சாலை இருந்தால் விபத்து நிகழாது. போக்குவரத்து நெரிசலும் தவிற்க முடியும்.

முக்கியம்
தொழில்வளம் சிறக்க சாலை கட்டமைப்பு அவசியம். இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த வகையில் தற்போது தாரமங்கலம் புறவழிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications