“ஆர்எஸ்எஸ் அடிமைகள் அவர்கள்..” அன்புமணி தரப்பை சாடிய பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி!
சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, தங்களை எதிர்த்து செயல்படுவது ஆர்எஸ்எஸ் அடிமைகள் என அன்புமணி தரப்பை கடுமையாக சாடியிருக்கிறார்.
பாமகவின் தலைவர் யார் என்பதில் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸும் மாறி மாறி நீக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்த பொதுக்குழு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படி இருக்கையில், பொதுக்குழுவில் பேசிய ஸ்ரீகாந்தி, அன்புமணி தரப்பை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என விமர்சித்திருப்பது விவாதங்களை தூண்டியிருக்கிறது.
ஸ்ரீகாந்தி மேலும் பேசியதாவது, "ஐயாவுக்கு பைத்தியம் பிடித்து இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். மக்கள் மீது அவருக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. ஐயா இல்லாத இந்த பாமக, பிணத்துக்கு சமம். அந்த பிணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால், இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரைக்கும், லட்சக்கணக்கான தொண்டர்கள் உயிரோடு இருக்கும் வரைக்கும் அது நடக்கவே நடக்காது.
இப்போது நடக்கும் பிரச்சனையைப் பற்றி கவலைப்படாதீர்கள். இது ஒரு நல்ல சகுனம். கட்சியை இத்தனை நாட்களாக பிடித்திருந்த ஏழரை தொலைந்து போய் உள்ளது. துரோகிகள், சுயநலவாதிகள் எல்லோரும் போய்விட்டார்கள். விரைவில் தேர்தல் வரப்போகிறது, இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சாதாரண கட்சியாக இருக்க கூடாது.
அரும்பாடு பட்டு கட்சியை வளர்த்த ஐயாவை, நீதிமன்றம் ஏறி கட்சி மீட்கிற நிலைக்கு கொண்டு வந்த நீங்க.. மக்களோட உரிமையை மீட்கப்போறேன் என்று சொல்வது நல்ல கேலிக்கூத்து. எதற்கெடுத்தாலும் எங்கள் நிர்வாகிகளை திமுக கைக்கூலி என்று மேடைக்கு மேடை முழங்குகிறார்கள். இதை சொல்கிறவர்கள் யார் என்று பார்த்தால், ஆர்எஸ்எஸ் அடிமைகளாக இருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications