சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கள்ளக்காதலனுடன் கள்ளத்தனமாக செல்போனில் பேசிய ஷாலினி.. கண்டித்த பிரபு.. சேலத்தில் நடந்த ஷாக் சம்பவம்!

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் மர்மமான முறையில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரை கைது செய்தனர்.

Recommended Video

    கள்ளக்காதலனுடன் கள்ளத்தனமாக செல்போனில் பேசிய ஷாலினி.. கண்டித்த பிரபு.. சேலத்தில் நடந்த ஷாக் சம்பவம்!

    சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (39) வாழையிலை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (22). இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

    இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆண் நண்பருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    பிரச்சனை வரும் முன்பே உஷாரான தமிழக அரசு..சென்னை, கோவை போல்..மற்ற பகுதிகளுக்கும் வருகிறது கட்டுப்பாடுபிரச்சனை வரும் முன்பே உஷாரான தமிழக அரசு..சென்னை, கோவை போல்..மற்ற பகுதிகளுக்கும் வருகிறது கட்டுப்பாடு

    செல்போன்

    செல்போன்

    இதை கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காததால் மனைவிடம் இருந்த செல்போனை கணவர் பறித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி செல்போனை தெரியாமல் எடுத்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    கொள்ளையர்கள் நகை பறிப்பு

    கொள்ளையர்கள் நகை பறிப்பு

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கணவரை கொலை செய்துவிட்டு சென்று விட்டதாக கூறி மனைவி ஷாலினி கூச்சல் எழுப்பியுள்ளார்.

    காவல் நிலையம்

    காவல் நிலையம்

    உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது பிரபு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உறவினர்கள் நேரில் பார்த்தபோது, பிரபு மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மனைவி ஷாலினி கொலை செய்து இருக்கலாம் எனவும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    காவல் துறை

    காவல் துறை

    பின்னர் விரைந்து வந்த அம்மாபேட்டை காவல் துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஷாலினியை காவல் நிலையம் அழைத்துச் சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து ஷாலினிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பிருப்பதை அடுத்து ஷாலின் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மற்றொரு நபரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இச் சம்பவம் காவல் நிலையத்திற்கு பின்புறமே நடைபெற்றுள்ளதால் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Ammapettai Police arrest wife for murdering her husband as she had an illegal affair with someone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X