திமுகவில் ’துரந்தர்’ பிரேமலதா? ஒரே பேச்சில் சோலியை முடித்த அண்ணியார்! கடும் அப்செட்டில் அறிவாலயம்!

Subscribe to Oneindia Tamil

சேலத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா விஜயகாந்த் பேசிய கருத்துகள் திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாசாரம்" என ஸ்டாலின் முன்பு பிரேமலதா பேசியதால் அவரும் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திமுக குடும்பத்தை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் பிரேமலதாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, முதலில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை மற்றும் பாதுகாப்பு குறித்து பாராட்டுக்களுடன் தனது உரையை தொடங்கினார்.

Tamil Nadu Assembly Election 2026 Premalatha Vijayakanth DMK

மேலும், சமீபத்தில் பிரச்சாரத்துக்கு முன்னதாக நடைபயிற்சியில் தானும் முதல்வருடன் இணைந்து நடந்ததாகவும், அப்போது பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து அவர் காட்டும் அக்கறையை நேரில் பார்த்ததாகவும் கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த்

ஆனால் அதற்குப் பிறகு அவர் கூறிய ஒரு கருத்துதான் மேடையில் இருந்தவர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது. "தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டு தான் அண்ணன் மேல இருக்கு. அதுவும் இந்த பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை; போதை கலாசாரம் இருக்கு. இதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இந்த ஆட்சியின் மீது வேறு ஒன்றும் சொல்ல முடியாது. " என்றார். கூட்டணிக் கட்சிகளின் மேடையில், அதுவும் முதல்வர் முன்னிலையிலேயே பிரேமலதா பேசியதால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பெண்களின் பாதுகாப்பு

அதே நேரத்தில், தனது உரையின் அடுத்த பகுதியில் பிரேமலதா அந்த குற்றச்சாட்டுகளை சரிசெய்யும் திறன் முதல்வருக்கு இருப்பதாகவும், பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தானும் நேரடியாக எடுத்துச் சொல்லத் தயார் என்றும் கூறினார். பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாஜக - அதிமுக

பிரேமலதாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதுவும் முதலமைச்சரை மேடையில் வைத்து பாஜக - அதிமுகவின் குரலை போல தான் பேசி இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர் திமுகவினர். கடந்த காலங்களில் திமுகவைமிகக் கடுமையாக விமர்சித்த பிரேமலதா திடீரென திமுக கூட்டணியில் இணைந்தார். அவரது கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது.

ஸ்டாலின் அதிருப்தி

ஆனால் வழக்கமாக பாஜக அதிமுக மேடைகளில் பேசுவதைப் போல பிரேமலதா பேசிவிட்ட நிலையில், அதற்கு பிறகு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சில வார்த்தைகள சொல்லி சமாளித்ததாக சொல்கின்றனர் அதிமுகவினர். மேலும் 'துரந்தர்' படத்தில் வருவது போல திமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவின் ஸ்பை தான் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

திமுக அதிர்ச்சி

இந்நிலையில், பிரேமலதாவின் பேச்சு களத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்திருப்பது கண்டு திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைமையின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக திமுக குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் பிரேமலதா விஜயகாந்த்-ஐ சந்திப்பு பேசியதாகவும், தனது பேச்சு தொடர்பாக அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+