மளிகையுடன் உலாவிய வைஜெயந்தி.. சேலம் ஆத்தூர் ஜெயிலுக்குள் பெண்ணை பார்த்ததுமே அதிர்ந்த ஆபிஸர்ஸ்.. ஏன்?
சேலம்: தமிழக பத்திரப் பதிவுத்துறை உள்பட பல்வேறு துறைகளில் பெண் அதிகாரிகள், தொடர்ந்து கைதாகி வருகிறார்கள்.. அந்தவரிசையில் சிறைத்துறையையும் சிலபெண்கள் விட்டுவைக்கவில்லை.. யாரிந்த வைஜெயந்தி?
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆசாத் கா அமீர்த் மஹோத்தவா என்ற திட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் தமிழக அரசின் அனுமதி பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து, முக்கிய நாட்களில் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழக சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது.
நன்னடத்தை அடிப்படையில் இப்படி விடுதலையாகும் கைதிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறைத்துறை நிர்வாகம், அரசு சாரா அமைப்புக்களின் உதவியுடன் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், இனிப்பு, வழங்கி அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.
சிறைக்கைதிகள்: சிறையிலுள்ள கைதிகள் மட்டுமல்லாமல், விடுதலையாகி செல்லும் சிறைக்கைதிகளின் நன்மைகளையும் கருத்தில் கொள்ளும் அளவுக்கு, இவர்களுக்கு ஒதுக்கப்படும் மளிகை பொருட்கள் மிக முக்கியத்துவம் பெறக்கூடியவையாகும். இந்த மளிகை பொருட்களைதான், திருட்டுத்தனமாக, சிறை கண்காணிப்பாளரே வெளியில் விற்பனை செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை அமைந்துள்ளது.. இங்கு, 40க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கான உணவு வழங்க, கூட்டுறவுத்துறையில் இருந்து அரிசி, மளிகை பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது...
மளிகை பொருட்கள்: இங்கு, கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் கள்ளத்தனமாக விற்பதாக தகவல் கிடைத்தது. அதாவது, மளிகை பொருட்கள் தரமில்லை என்றும், மீதியாகும் பொருட்களை, வெளி மார்க்கெட்டில் விற்றுவிடுவதாகவும் புகார் எழுந்தது. இதனால் சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத், விஜிலன்ஸ் போலீசார், ஒரு வாரத்துக்கு முன்பே, ஆத்துார் சிறைச்சாலைக்கு சென்று நேரடி ஆய்வில் ஈடுபட்டாள்..
சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் சிறை விஜிலென்ஸ் அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. கைதிகளுக்கு உணவு வழங்குதல், உணவு தரம், உணவு லிஸ்ட் குறித்து கேட்டறிந்தனர். சிறை கைதிகளிடம், பாதுகாப்பு வசதி, குறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்..
மளிகை பொருட்கள்: அப்போது, வெளி விற்பனைக்காக 23 மூட்டைகளில் வைத்திருந்த அரிசி, பருப்பு, நிலக்கடலை, ஆயில் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு தரமான பொருட்களை மளிகை கடைகளுக்கு கொடுத்து, தரம் குறைந்த பொருட்களை அங்கிருந்து சிறைக்கு அனுப்புவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல, தட்டச்சு அறையில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 23 வகை மளிகை பொருட்கள் தனியாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவைகளை பறிமுதல் செய்து, சிறை உணவு பொருள் கிடங்கில் ஒப்படைத்த அதிகாரிகள், இது சம்பந்தமாக துணை சிறை அலுவலர் வைஜெயந்தி, பணிபுரியும் காவலர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணை அறிக்கை: இது தொடர்பாக விளக்கம் தருமாறு, துணை சிறை அலுவலர் வைஜெயந்திக்கு, எஸ்பி வழங்கினார்.. அதேபோல, சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாளுக்கும் விசாரணை அறிக்கையை அனுப்பினார்.
உணவு பொருள் பாதுகாப்பிற்கு, துணை சிறை அலுவலர் தான் பொறுப்பு என்பதால், பறிமுதல் செய்த பொருட்கள் குறித்து, துணை சிறை அலுவலர் வைஜெயந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக, சென்னை தலைமை அலுவலகத்திற்கு, துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், உயர் அதிகாரிகள் உத்தரவுக்கு பின், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த வாரமே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதிரடி உத்தரவு: இறுதியில், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வைஜெயந்தி செய்த தில்லுமுல்லு உறுதியானதையடுத்து, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், வைஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, உதவி சிறை அலுவலர் ஒலிமுத்துவுக்கு, துணை சிறை அலுவலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சிறை கண்காணிப்பாளரே, அதுவும் பெண் அதிகாரியே இப்படியொரு மோசடியில் இறங்கி கைதாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஆத்தூரில் ஏற்படுத்தி வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications