Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடைகள்.. மாதம் 20 ஆயிரம் ‘மாமூல்'.. வசமாக சிக்க வைக்கப்பட்ட போலீஸ் ஏட்டு.. சேலத்தில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சேலம்: மாதம் ரூ.20 ஆயிரம் 'மாமூல்' கொடுத்து விட்டு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறிய புகாரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு பிரபாவதியை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் இலவசமாக ரேஷனில் அரிசி கிடைப்பதால் அதை மக்களிடமும், சில கடைகளில் மொத்தமாக வாங்கியும் வெளிமாநிலங்களுக்கு கடத்துவது அதிகமாக நடக்கிறது. கர்நாடகா மாநிலத்திற்குத்தான் ரேஷன் அரிசி அதிக அளவு கடத்தப்படுகிறது. மூட்டை மூட்டையாக லாரிகளில் கடத்துவோர் சோதனை சாவடிகளில் சிக்கிவிடுகிறார்கள். அப்படி சிக்குவோர் போலீசுக்கு எதிராக திரும்பினால் எப்படி இருக்கும்... அப்படியான ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

Salem Food Smuggling Unit police head constable arrested over ration shop rice smuggle

சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் தங்கராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சேலத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டுக்கள் பிரபாவதி, மணி ஆகிய 2 பேர் தன்னிடம் மாதம் ரூ.20 ஆயிரம் 'மாமூல்' கொடுத்து விட்டு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறியதாக புகார் அளித்தார்.

பின்னர் மாமூல் வாங்கிய புரோக்கர் குமரேசன் என்பவரை கடந்த புதன்கிழமை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு பெண் போலீஸ் ஏட்டு பிரபாவதியை நேற்று கைது செய்தனர். தலைமறைவான ஏட்டு மணியை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதனிடையே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் , வேண்டுமென்றே மாட்டிவிடும் நோக்கில் தங்கராஜ் செயல்படுவதாகவும், அவரை கைது செய்த காரணத்தால் இப்படி பழிவாங்கி உள்ளதாவும் சந்தேகத்ததில் உள்ளனர். ஏனெனில் தங்கராஜ் கடந்த 2022-ம் ஆண்டு கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை பெங்களூரு கடத்தி செல்லும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜாமீனில் வந்த அவர், கடந்த அக்டோபர் மாதம் கொண்டலாம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய போது 2-வது முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்

இவர், ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடும் கெடுபிடி மேற்கொண்டு வந்தால் வேண்டுமென்றே தங்கராஜ் புகார் அளித்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இதையும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்கராஜிடம் தனியாக விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை கண்டுபிடிக்க விசாரிக்க தொடங்கி உள்ளனர். அ , கைதானவர்களை காவலில் எடுத்து விசாரித்த பிறகும்தான் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+