ரேஷன் கடைகள்.. மாதம் 20 ஆயிரம் ‘மாமூல்'.. வசமாக சிக்க வைக்கப்பட்ட போலீஸ் ஏட்டு.. சேலத்தில் ட்விஸ்ட்
சேலம்: மாதம் ரூ.20 ஆயிரம் 'மாமூல்' கொடுத்து விட்டு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறிய புகாரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு பிரபாவதியை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் இலவசமாக ரேஷனில் அரிசி கிடைப்பதால் அதை மக்களிடமும், சில கடைகளில் மொத்தமாக வாங்கியும் வெளிமாநிலங்களுக்கு கடத்துவது அதிகமாக நடக்கிறது. கர்நாடகா மாநிலத்திற்குத்தான் ரேஷன் அரிசி அதிக அளவு கடத்தப்படுகிறது. மூட்டை மூட்டையாக லாரிகளில் கடத்துவோர் சோதனை சாவடிகளில் சிக்கிவிடுகிறார்கள். அப்படி சிக்குவோர் போலீசுக்கு எதிராக திரும்பினால் எப்படி இருக்கும்... அப்படியான ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் தங்கராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சேலத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டுக்கள் பிரபாவதி, மணி ஆகிய 2 பேர் தன்னிடம் மாதம் ரூ.20 ஆயிரம் 'மாமூல்' கொடுத்து விட்டு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறியதாக புகார் அளித்தார்.
பின்னர் மாமூல் வாங்கிய புரோக்கர் குமரேசன் என்பவரை கடந்த புதன்கிழமை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு பெண் போலீஸ் ஏட்டு பிரபாவதியை நேற்று கைது செய்தனர். தலைமறைவான ஏட்டு மணியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதனிடையே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் , வேண்டுமென்றே மாட்டிவிடும் நோக்கில் தங்கராஜ் செயல்படுவதாகவும், அவரை கைது செய்த காரணத்தால் இப்படி பழிவாங்கி உள்ளதாவும் சந்தேகத்ததில் உள்ளனர். ஏனெனில் தங்கராஜ் கடந்த 2022-ம் ஆண்டு கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை பெங்களூரு கடத்தி செல்லும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜாமீனில் வந்த அவர், கடந்த அக்டோபர் மாதம் கொண்டலாம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய போது 2-வது முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்
இவர், ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடும் கெடுபிடி மேற்கொண்டு வந்தால் வேண்டுமென்றே தங்கராஜ் புகார் அளித்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இதையும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்கராஜிடம் தனியாக விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை கண்டுபிடிக்க விசாரிக்க தொடங்கி உள்ளனர். அ , கைதானவர்களை காவலில் எடுத்து விசாரித்த பிறகும்தான் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications