அலறிய ஆத்தூர்.. அவங்களை உயிரோடு எரித்து கொல்ல இதுதான் காரணம்.. 16 வயது பேரனின் பகீர்.. மிரண்ட போலீஸ்
தாத்தா பாட்டியை கொன்ற 16 வயது சிறுவன் வாக்குமூலம் தந்துள்ளான்
சேலம்: தாத்தா, பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்றது ஏன் என்பது குறித்து கைதான 16 வயது சிறுவன் அளித்துள்ள வாக்குமூலமானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது கொத்தாம்பாடி பாரதியார் நகர் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் காட்டு ராஜா.. 75 வயதாகிறது..
இவருடைய மனைவி காசி அம்மாள்.. 65 வயதாகிறது.. கடந்த 12-ந் தேதி இரவு இவர்களது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.. அக்கம்பக்கத்தினர் அந்த சத்தம் கேட்டு விரைந்து வந்தனர்..

பேரன்
வீட்டுக்குள்ளிருந்தும் அலறல் சத்தம் கேட்கவும், அவர்களை காப்பாற்ற முயன்றனர்.. ஆனால், வீட்டினுள் இருந்த வயதான தம்பதி 2 பேரும் உடல் கருகி அங்கேயே பலியானார்கள்... இதையடுத்து போலீசார் விசாரணையை துவக்கினர்... அப்போதுதான், தீ வைத்து உயிரோடு எரித்துக்கொன்றது, அவர்களின் 16 வயது பேரன் என்பது தெரியவந்தது..

வாக்குமூலம்
சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.. இந்நிலையில், சிறுவனின் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர்.. சிறுவன் அதில் சொன்னதாவது: "எனக்கு படிப்பு ஏறவே இல்லை.. எந்த நேரமும் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டே இருந்தேன்.. இதை என் அப்பா, அம்மா கூட கண்டிக்கவில்லை... ஆனால் தாத்தாவும், பாட்டியும் திட்டிக் கொண்டே இருந்தார்கள்.. அறிவுரை சொல்லி கொண்டே இருந்தனர்..

பெரியப்பா
என்னுடைய பெரியப்பா திமுக கட்சி பிரமுகர்.. அவர் பெயர் தேசிங்குராஜா.. இவரை ஒப்பிட்டு என்னை திட்டி கொண்டே இருந்தனர்.. "எங்க மூத்த பையன் எப்படி சம்பாதிக்கிறான் பாரு, அவனை பார்த்து பிழைக்க கற்றுக்கொள்... எங்கியாவது வேலைக்கு போ, ஏதாவது தொழில் கத்துக்கோ, இப்படி ஊரை சுற்றிக்கொண்டு இருக்காதே" என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருந்தார்கள்.. அதை நான் பொருட்படுத்தவே இல்லை..அதனால் என்னை அடிக்கவும் செய்தனர்...

அவமானம்
அதனால், கடந்த 12-ந் தேதி இரவு, நான் மது அருந்திவிட்டு கொத்தாம்பாடி ஆற்றோரத்தில் பீடி புகைத்துக்கொண்டு இருந்தேன்... அப்போது என்னுடைய பாட்டி அங்கே வந்தாங்க.. துடைப்பத்தாலும், குச்சியாலும் அடிச்சாங்க.. கடுமையா திட்டினாங்க.. இதெல்லாம் என்னுடைய நண்பர்கள் முன்னாடியே நடந்தது.. அதனால் எனக்கு அவமானமாகிவிட்டது..

கைது
தாத்தா, பாட்டி 2 பேரையும் கொலை செய்ய திட்டம் போட்டேன்.. எங்க வீட்டில் 2 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது.. அதை எடுத்து கொண்டு, ஒரு பூட்டையும் எடுத்துக்கொண்டு தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்றேன்... 2 பேரும் தூங்கும்வரை காத்திருந்தேன்.. பிறகு வெளிப்புறம் கதவை பூட்டிவிட்டு, கூரை வீட்டில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடிவிட்டேன்" என்று வாக்குமூலத்தில் சொல்லி உள்ளான்.. இதையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications