Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழல் புகாரில் சிக்கியவருக்கு பணி நீட்டிப்பா? சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு கடும் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம், தமிழக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு மனு அளித்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார்.

salem periyar university vice chancellor

இந்த புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சில மாதங்களுக்கு சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். துணைவேந்தர் ஜெகநாதன் தனியாக கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் அரசு அலுவலர்களை பயன்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி அதில் பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் பங்குதாரராக இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டதால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சாரிபில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளனர். ஊழல் புகாரில் சிக்கிய ஜெகநாதனை பணி நீட்டிப்பு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆளுநர், முதலமைச்சருக்கு 500 பக்கங்கள் கொண்ட மனுவை அனுப்பியுள்ளனர். அதில், இம்மாத இறுதியில் பணிநிறைவு செய்ய உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணி நீட்டிப்பு செய்ய தீவிர முயற்சி நடந்து வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் நடந்ததை உள்ளாட்சி தணிக்கைத்துறை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. 2021-ல் துணைவேந்தராக பதவியேற்ற ஜெகநாதன் பதவியேற்றது முதல் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளையே முன்னெடுத்து வருகிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவரது பதவி காலத்தை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+