மாணவர்கள் காலில் சட்டென விழுந்து மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ அருள்.. பரபரத்த சேலம்
சேலம்: சேலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினரும் பாமகவினரும் மோதிக்கொண்டனர். இந்த வேளையில் பாமக எம்எல்ஏ அருள் மாணவ-மாணவிகளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அருள். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர். இவரது தொகுதிக்குட்பட்ட பகுதி பாகல்பட்டி. இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் எம்எல்ஏ அருள் பங்கேற்றார். அப்போது திமுக நிர்வாகிகள் சிலர் அருளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவ-மாணவிகளுக்கு அவரை சைக்கிள் கொடுக்க விடாமல் செய்ததோடு, அவரை பேச விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது ‛‛மாணவர்களுக்கு நாங்களே சைக்கிளை கொடுத்து விடுகிறோம். நீங்கள் தர வேண்டாம்'' என திமுகவினர் கூறியுள்ளனர். அதற்கு அருள் எம்எல்ஏ, ‛‛இது எனது தொகுதி. இதனால் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் உரிமை உள்ளது'' எனக்கூறியுள்ளார். இதையடுத்து இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மாணவர்கள் பதறிப்போயினர். இதையடுத்து இருதரப்பையும் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து எம்எல்ஏ அருள் விழாவில் பேசினார்.
அப்போது , ‛‛நான் மாணவர்களிடம் உரையாடத்தான் வந்தேன். அரசியல் செய்ய வரவில்லை. ஒழுக்கத்தை கற்கும் இடத்தில் உங்களை அசிங்கப்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கும் சேர்த்தே காலில் விழுகிறேன்'' என வருத்தம் தெரிவித்தார் அருள் எம்எல்ஏ. மேலும் தான் வைத்து பேசிய மைக்கை அருகே இருந்தவரிடம் கொடுத்துவிட்டு தரையில் படுத்து மன்னிப்பு கேட்க முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இருப்பினும் அருள் எம்எல்ஏ அவர்களை மீறி தரையில் படுத்து மாணவ-மாணவிகளை நோக்கி கைகளை கூப்பி மன்னிப்பு கோரினார். 2 முறை இப்படி செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த வேளையில் பதறிப்போன மாணவ-மாணவிகள் தாங்கள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications