அமைச்சர் கே.என்.நேரு கார் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி- சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!
சேலம் : சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைச்சர் காரின் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குப்தா என்பவர், ஆட்டையாம்பட்டி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான காலி நிலத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மளிகை கடையை அவரால் சரிவர நடத்த முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும், கடைக்கு வாடகையும் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், சந்திரன் ஆகியோர், பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து, வீட்டில் இருந்த தினேஷ் குப்தா உள்ளிட்டோரை தாக்கியதோடு, கடையை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் காரின் முன்பு, தினேஷ் குப்தாவும், அவரது மனைவியும் திடீரென தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தியதால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தற்கொலைக்கு முயன்ற பெண் கூறியதாவது : தங்களது முன்னோர்கள் முதல் பல ஆண்டுகளாக கடையை நடத்தி வருகிறோம். எனது கணவருக்கு உடல்நலக் குறைவால் கடையை திறக்க முடியாத நிலையில், கடந்த 10 நாட்களாக வாடகை கொடுக்க வில்லை. எங்களது கடையை பறித்துக்கொண்டனர். கடையை காலி செய்ய வேண்டும் என ஊரில் உள்ளவர்கள் மிரட்டுகிறார்கள். வாழ்வாதாரம் இன்றி வீதியில் நிற்கும் தங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
தற்கொலைக்கு முயன்ற தம்பதியை, விசாரணைக்காக டவுன் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் தலைமையில் மாவட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications