உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ.. படார்னு உடைச்சிட்டாங்க.. மனமுடைந்து போன சிற்பி!
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சிற்பி மணிகண்டன் புகார் அளித்துள்ளார்
Recommended Video
சேலம்: "கஷ்டப்பட்டு சிலையை செஞ்சேன் சார்... அதை தூக்கி போட்டு அதிகாரிகள் உடைச்சிட்டாங்க.. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு சொல்றாங்க" என்று விருது வாங்குவதற்காக செய்த சிலையை உடைத்தவர்கள் மீது சிற்பி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். 28 வயது இளைஞர். இவர் ஒரு சிற்பி. கடந்த 12 வருஷங்களாகவே சிற்பக்கலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு அரசு நடத்தும் பூம்புகார் மாநில விருதுக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி சிலையை வடிவமைக்க துவங்கி, செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் முடித்து விருதிற்காக பதிவு செய்துள்ளார்.
இந்த விருது வாங்குவதற்காகவே ஒரு ஸ்பெஷலான மர சிற்பத்தை வடிவமைத்தார். சிவநடனம் கோலத்தில் குமிழ் என்ற ஒரே மரத்தில் 45 நாட்களுக்குள் அந்த சிலையை செய்து முடித்தார் மணிகண்டன்.
பிறகு செய்து முடித்த சிலையை தமிழ்நாடு கைத்திட தொழில்கள் வளர்ச்சிக் கழகம் அலுவலகத்தில் கொண்டு போய் ஒப்படைத்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் சிலையை வாங்கி உடைத்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார் மணிகண்டன்.
சேதமடைந்த சிலையை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், விருதுக்கு அனுப்ப முடியாது என்று அதிகாரிகள் சொல்லி அவமானப்படுத்தியதாக மணிகண்டன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை பற்றி அவர் சொல்லும்போது, "கஷ்டப்பட்டு செஞ்ச சிலை அது. ஆனால் அதை உடைச்சிட்டாங்க. சிற்பிகளின் அங்கீகாரம் அரசு கொடுக்கும் விருதுகள்தான். ஆனால் அதிகாரிகள் சிற்பிகளை அவமானப்படுத்துகின்றனர். உடைக்கப்பட்ட சிலை பத்தி கேட்டதுக்கு, எங்களை எதுவும் செய்ய முடியாது முடிந்ததை பார்த்துக்கோன்னு சொல்லி அவமானப்படுத்தறாங்க.
ஒரு சிற்பியோ ஒரு கலைஞனோ மேலே வருவது எவ்வளவு கஷ்டம்? பலபிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த சிற்பத்தை செஞ்சேன். முதல் போட்டியே இப்படி இருக்கு. இனி எப்படி கலந்து கொள்வது? எனக்கு கவர்ன்மென்ட் அவார்டே வேணாம். எனக்கான நீதியை அரசு பெற்றுத் தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications