உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ.. படார்னு உடைச்சிட்டாங்க.. மனமுடைந்து போன சிற்பி!
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சிற்பி மணிகண்டன் புகார் அளித்துள்ளார்
Recommended Video
சேலம்: "கஷ்டப்பட்டு சிலையை செஞ்சேன் சார்... அதை தூக்கி போட்டு அதிகாரிகள் உடைச்சிட்டாங்க.. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு சொல்றாங்க" என்று விருது வாங்குவதற்காக செய்த சிலையை உடைத்தவர்கள் மீது சிற்பி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். 28 வயது இளைஞர். இவர் ஒரு சிற்பி. கடந்த 12 வருஷங்களாகவே சிற்பக்கலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு அரசு நடத்தும் பூம்புகார் மாநில விருதுக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி சிலையை வடிவமைக்க துவங்கி, செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் முடித்து விருதிற்காக பதிவு செய்துள்ளார்.
இந்த விருது வாங்குவதற்காகவே ஒரு ஸ்பெஷலான மர சிற்பத்தை வடிவமைத்தார். சிவநடனம் கோலத்தில் குமிழ் என்ற ஒரே மரத்தில் 45 நாட்களுக்குள் அந்த சிலையை செய்து முடித்தார் மணிகண்டன்.
பிறகு செய்து முடித்த சிலையை தமிழ்நாடு கைத்திட தொழில்கள் வளர்ச்சிக் கழகம் அலுவலகத்தில் கொண்டு போய் ஒப்படைத்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் சிலையை வாங்கி உடைத்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார் மணிகண்டன்.
சேதமடைந்த சிலையை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், விருதுக்கு அனுப்ப முடியாது என்று அதிகாரிகள் சொல்லி அவமானப்படுத்தியதாக மணிகண்டன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை பற்றி அவர் சொல்லும்போது, "கஷ்டப்பட்டு செஞ்ச சிலை அது. ஆனால் அதை உடைச்சிட்டாங்க. சிற்பிகளின் அங்கீகாரம் அரசு கொடுக்கும் விருதுகள்தான். ஆனால் அதிகாரிகள் சிற்பிகளை அவமானப்படுத்துகின்றனர். உடைக்கப்பட்ட சிலை பத்தி கேட்டதுக்கு, எங்களை எதுவும் செய்ய முடியாது முடிந்ததை பார்த்துக்கோன்னு சொல்லி அவமானப்படுத்தறாங்க.
ஒரு சிற்பியோ ஒரு கலைஞனோ மேலே வருவது எவ்வளவு கஷ்டம்? பலபிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த சிற்பத்தை செஞ்சேன். முதல் போட்டியே இப்படி இருக்கு. இனி எப்படி கலந்து கொள்வது? எனக்கு கவர்ன்மென்ட் அவார்டே வேணாம். எனக்கான நீதியை அரசு பெற்றுத் தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications