அரசு பேருந்தில் துபாய்க்கு டிக்கெட்.. ரூ10,000 கட்டணம்.. சேலத்தில் நடந்தது என்ன? வெளிவந்த உண்மை!

Subscribe to Oneindia Tamil

கருஷ்ணகிரி: ஈரோடு மாவட்டம் பவானி பைபாஸில் இருந்து துபாய்க்கு ரூ.10,000 டிக்கெட் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்சில் வழங்கப்பட்டதாக அதில் பயணம் செய்த நபர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த டிக்கெட்டை புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு இருந்த நிலையில், இந்த டிக்கெட் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. துபாய்க்கு பஸ்சில் போக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இது குறித்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி பைபாஸ் பகுதியில் இருந்து பி. தாமோதரன் என்ற பயணி தனது நண்பர் எம். ராஜாவுடன் கோயம்புத்தூர் - பெங்களூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஓசூர் செல்வற்காக ஏறினார். மேலும் ஓசூருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க என கண்டக்டரிடம் அதற்கு கட்டணமாக ரூ.150 செலுத்தி இருக்கிறார். டிக்கெட்டை வாங்கிய பிறகு அதை பார்த்த தாமோதரன் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார்.

TN Government Bus Passenger Booking Ticket to Hosur Shocked to Receive Dubai Ticket With Rs 10 000 Fare

துபாய்க்கு ரூ.10,000 டிக்கெட்

காரணம், டிக்கெட்டில் பவானி பைபாஸ் முதல் "துபாய், ஐக்கிய அரபு அமீரகம் (UAE)" என அச்சிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, கட்டணமாக ரூ.10,000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் தாமோதரன் பகிர்ந்த நிலையில், அந்த பதிவு வேகமாக பரவி பலரும் நகைச்சுவையாக கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் மண்டல அதிகாரிகள் விளக்கம் அளித்ததாகவும் தகவல் பரவியது. அந்த தகவல் என்னவென்றால், டிக்கெட் வழங்கும் மின்னணு கருவியில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறே இந்த தவறுக்கு காரணம் என்றும், பயணியிடம் வழக்கமான ரூ.150 கட்டணம்தான் வசூலிக்கப்பட்டது என்றும் தெரிவித்தபோல் மற்றொரு தகவலும் பரவியது.

தமிழக அரசு விளக்கம்

இந்த வித்தியாசமான டிக்கெட் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேற்கண்ட இரு தகவல்களுமே வதந்தி என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பவானி பைபாஸ் To துபாய் - ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவும் தவறான தகவல் !

பரவும் செய்தி

ஈரோடு பவானி பைபாஸ் முதல் துபாய் வரை செல்ல அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) அளித்துள்ள விளக்கத்தில், "சமூக வலைதளங்களில் பரவும் டிக்கெட் (எண்:27846) ஓசூர் புறநகர் கிளைக்கு உட்பட்ட ரூட் எண் 457F-ல் 06-06-2026 அன்று பவானி பைபாஸில் இருந்து கோயம்புத்தூர் வரை ரூ.100-க்கு வழங்கப்பட்டது.

பவானியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச்சீட்டை போலியாகத் திருத்தி, அதிலிருந்த 'பவானி - கோயம்புத்தூர்' என்ற பயண விவரத்தை 'பவானி - துபாய்' எனவும், ரூ.100 கட்டணத்தை ரூ.10,000 எனவும் மாற்றியமைத்து தொழில்நுட்ப முறையில் போலியாக்கம் செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்று விளக்கமளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+