'ஓரம் போ'.. நடுரோட்டில்.. சட்டென குச்சியை எடுத்து மாடுகளை ஓட்டிய சப்-இன்ஸ்பெக்டர்.. வைரல் வீடியோ!
சேலம்: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முக்கியமான சாலைகளில் சுற்றித் திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
Recommended Video
இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன. திருச்சி மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் இதனை கட்டத் தவறினால் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்படும் என சமீபத்தில் திருச்சி மாநகராட்சி அதிரடியாக அறிவித்தது.

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்
சேலம் மாநகரப் பகுதிகளிலும் அதிக அளவில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றித்திரிந்து சாலைகளில் உறங்குவதால் அதிகளவில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நிகழ்கிறது. இதுபற்றி கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.

போக்குவரத்து நெரிசல்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலைகளில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையின் நடுவே நின்று போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியது இதனால் அந்த வழியாக சென்ற பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மேற்கொண்டு செல்லமுடியாமல் சாலைகளில் நின்றது.

மாடுகளை ஓட்ட தொடங்கினார்
இதனால் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றார். இந்த நிலையில் அந்த வழியாக சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி சென்று கொண்டிருந்தார். கால்நடைகளால் நெரிசல் ஏற்படுவதை கண்ட அவர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக கையில் குச்சி எடுத்து மாடுகளை ஓட்ட தொடங்கினார்.

வைரல் வீடியோ
தொடர்ந்து அவர் மாடுகளை சாலையில் ஓட்டத் தொடங்கினார். போலீஸ் சீருடையில் சப்-இன்ஸ்பெக்டர் மாடுகளை ஓட்டிச் சென்றதை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து சென்றனர் பொறுப்புமிக்க காவலரின் இந்த செயலால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு இருந்து சென்றன. சப்-இன்ஸ்பெக்டர் மாடுகளை ஓட்டிய வீடியோ காட்சி டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications