'நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன்' மிரட்டும் அதிகாரி.. வைரல் ஆடியோ
சேலம்: சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பெண் அதிகாரியை தொலைபேசியில் வருவாய்த் துறை அலுவலர் சங்க நிர்வாகி மிரட்டியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன். விளையாடுறீங்களா... என்பதாக ஆடியோ உள்ளது.
Recommended Video
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட செயலாளராக உள்ளவர் அர்த்தநாரி. சீனியர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர், சங்கத்தில் உள்ள அலுவலர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அதிகாரிகளுடன் அவ்வப்போது முறையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஆதி திராவிடர் நலத்துறையில் பணியாற்றும் இலக்கியா என்ற அலுவலர், அனுப்ப வேண்டிய செலவு பட்டியல்களை கால தாமதம் செய்ததாகவும், இவருடை உயர் அதிகாரியான, சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, இலக்கியாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

வைரலாகும ஆடியோ
இந்த பிரச்சனை தொடர்பாக அர்த்தனாரி, சாந்தியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார், அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் அர்த்தனாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் அலுவலர் சாந்தியிடம் அநாகரிகமாக பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாந்தியிடம் ஆவேசமாக பேச்சு
அந்த ஆடியோவில் சாந்தியிடம் பேசும் அர்த்தனாரி, ``அந்த இலக்கியா பெண்ணிடம் என்னங்க பிரச்னை? அவுங்க என் தங்கை. கூப்பிட்டு பொறுமையா சொல்லுங்க. அநாவசியாமாகப் பேசுவதை நிறுத்திக்கோங்க. நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன். விளையாடுறீங்களா... நேரில் வந்தால் நாறிப்போயிடும். நீ அதிகாரியா... உனக்கு அறிவு இருக்கா... வந்தேன்னா ஆபீஸை இழுத்து மூடி சீல் வச்சிடுவேன். நானும் பார்த்துட்டு இருக்கேன். நீ ஓவரா போற, நீயும் ஒரு பொம்பள தானே... நான் நேர்ல வந்தால் தாங்க மாட்ட'' என்பதாக உள்ளது.

யார் மீது தவறு
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்த் துறை அலுவலர் அர்த்தநாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட அம்பேத்கார் மக்கள் இயக்கம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சாந்தியின் மீது தவறு இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பதற்கு பதிலாக, அர்த்தனாரி இவ்வாறு அநாகரிகமாக பேசியது தவறு என்று சாந்தியின் தரப்பு கூறுகிறது.

சேலம் கலெக்டர் ஆபிஸ்
அதேபோல் அர்த்தனாரி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்காத சாந்தி, ஆடியோவை அம்பேத்கர் மக்கள் இயக்கத்திடம் கொடுத்தது தவறு என அர்த்தனாரி தரப்பும் கூறிவருகிறார்கள். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications