இந்தியர்களே ரெடியா? இறுதியான மிக முக்கியமான ஒப்பந்தம்.. இனிமேல் சிங்கப்பூர் போவது ரொம்ப ஈஸி
சிங்கப்பூர்: இந்தியா சிங்கப்பூர் இடையேயான விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுக்க பல்வேறு மெட்ரோ நகரங்களில் இருந்தும் சிங்கப்பூர் செல்வோர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இப்போது மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பயணத்தை மொத்தமாக மாற்றும்!
தெற்காசிய நாடுகளில் முக்கியமானது சிங்கப்பூர். பரப்பளவு அடிப்படையில் சிறிய நாடு என்றாலும் கூட உலக பொருளாதாரத்தில் சிங்கப்பூருக்கு முக்கிய இடம் இருக்கவே செய்கிறது. மேலும், இந்தியாவில் இருந்து கணிசமான அளவுக்குச் சிங்கப்பூரில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் இந்தியா சிங்கப்பூர் இடையேயான விமானப் போக்குவரத்து முக்கியமானதாக இருக்கிறது.

சிங்கப்பூர் விமான பயணம்
இதற்கிடையே இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானப் பயணத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஏர்லைனான ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இது தொடர்பாக முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் பயண பார்ட்னர்ஷிப்பில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்தியா சிங்கப்பூர் இடையேயான பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மாற்றம்
இந்த புதிய கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, கோட்ஷேர், லாயல்டி திட்டங்கள் மற்றும் கார்ப்பரேட் பயணச் சேவைகள் உள்ளிட்டவற்றில் ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான விமான ஆப்ஷன்களை கொடுக்கும் வகையில் இரு நிறுவனங்களும் இணைந்து தங்களுக்கான அட்டவணையைத் தயார் செய்யும்.
இது இந்தியா - சிங்கப்பூர் இடையேயான பயணத்தை எளிதாக்குகிறது. அதிலும் குறிப்பாக பிஸ்னஸ் கிளாஸில் பயணிப்போருக்கு இது பல்வேறு வகைகளில் நன்மையைக் கொடுக்கும். இதன் மூலம் இரு நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கும் சேவை மேம்படுத்தப்படும்.
குறைந்த ரேட்டில் டிக்கெட்
ஏற்கனவே ஏற் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன் நிறுவனங்கள் பல விஷயங்களில் இணைந்து செயல்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் இருந்து சிங்கப்பூர் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் தேவையை இது பூர்த்தி செய்யும். இந்தப் புதிய கூட்டணி மூலம், பயணிகள் அதிக இருக்கை வசதியையும், குறைந்த விலையில் டிக்கெட்களையும் பெறலாம் எதிர்பார்க்கலாம்.
இந்தியச் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் சிங்கப்பூர் செல்வது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சிங்கப்பூர் விசா
சிங்கப்பூர் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் விசா கோரி விண்ணப்பிக்கப் பயணத் தேதியிலிருந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் தேவை. மேலும், அதில் குறைந்தபட்சம் 2 பக்கங்கள் காலியாக இருப்பதும் அவசியம். பூர்த்தி செய்து கையொப்பமிடப்பட்ட 14A படிவம் மற்றும் 35mm x 45mm அளவிலான வெள்ளை பேக் கிரவுண்ட் கொண்ட போட்டோவும் தேவை.
அத்தோடு கன்பார்ம் செய்யப்பட்ட ரிட்டர்ன் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் முன்பதிவையும் அவசியம் இணைக்க வேண்டும். மேலும், கடந்த 6 மாத வங்கி அறிக்கையையும் காட்ட வேண்டி இருக்கலாம். விசா கோரி விண்ணப்பிக்கும்போது 30 சிங்கப்பூர் டாலர், சுமார் ரூ.2100 கட்டணம் செலுத்த வேண்டும்.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications