45 ஆண்டு திருமண வாழ்க்கையையே சிதைத்த பூனை- அதுவும் அந்த சிறுநீர் பஞ்சாயத்து- விவாகரத்தில் முடிந்தது
சிங்கப்பூர்: பூனைகள் மீது மிக அதிகமான அன்பை கொட்டியதால் 45 ஆண்டுகால திருமண வாழ்க்கையையே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் முறித்து கொண்ட சம்பவம் ஒன்று சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.
சிங்கப்பூரில் 1975-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் நீதிமன்றத்தில் விசித்திர வழக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனுவில், தாம் ஓய்வு பெற்ற ஆசிரியர். 2006-ம் ஆண்டு வரை நாங்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம்.

பூனைக்காக விவாகரத்து
ஆனால் என் மனைவி பூனைகள் மீது அதிக பிரியம் கொண்டவராக இருக்கிறார். வீடு முழுவதும் பூனைகளாக இருக்கின்றன. அது எனக்கு தொந்தரவாக இருக்கிறது. ஆகையால் விவாகரத்து வேண்டும் என்று அந்த ஆசிரியர் கூறியிருந்தார்.

பூனைக்காக வீட்டை விட்டு ஓட்டம்
அத்துடன் அவர் பூனைகளுக்கும் மனைவிக்குமான உறவுகள் குறித்தும் அந்த விவாகரத்தில் விவரித்திருந்தார். பல ஆண்டுகளாக பூனைகளை மனைவி வளர்த்து வருகிறார். இந்த பூனைகள் வீடு முழுவதும் சிறுநீரையும் மலத்தையும் கழித்துவிடுகின்றன. ஒருமுறை என் உடல் மீதும் பூனைகள் சிறுநீர் கழித்துவிட்டது; இதனால் வீட்டைவிட்டே ஓடிவிட்டேன் என குமுறியிருக்கிறார்.

பணத்தை அபேஸ் செய்த மனைவி
மேலும் ஓய்வூதியமாக தமக்கு 500 ஆயிரம் வெள்ளி கிடைத்தது. இதில் வீட்டு கடன்கள் அடைக்கப்பட்டு வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்தேன். இந்த பணத்தையும் மனைவி எனக்கு தெரியாமல் பயன்படுத்தி வந்தார். இதில் இருந்து மகனுக்கு 200 ஆயிரம் வெள்ளியை கார்வாங்கவும் மனைவி கொடுத்துவிட்டார் என்பது மற்றொரு புகார்.

விவாகரத்து கொடுத்த கோர்ட்
2006-ம் ஆண்டு முதல் இந்த விசித்திர விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வினோத வழக்கை விசாரித்த நீதிபதி, இனியும் இருவரும் இணைந்து வாழ முடியாது என்பது தெளிவாகிவிட்டது. ஆகையால் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக தீர்ப்பளித்தார். ஆனால் மனைவியோ இந்த விவாகரத்தை ஏற்காமல் அப்பீல் செய்வேன் என அடம்பிடிக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications