எங்கு திரும்பினாலும் புதிய கார்கள்.. சிங்கப்பூரில் பழைய கார்களையே பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் உங்களால் பழைய கார்களையே பார்க்க முடியாது. அந்தக் குட்டி நாட்டில் எந்தப் பக்கம் நீங்கள் போனாலும் புத்தம் புதிய கார்களையே பார்ப்பீர்கள்.. இதற்கு என்ன காரணம்.. அங்கு ஏன் யாரிடமும் பழைய கார்கள் இல்லை.. இதற்குப் பின்னால் எதாவது காரம் இருக்கிறதா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தெற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து முறையையே பயன்படுத்துவார்கள். அங்குக் காரை ரொம்ப அரிதாகவே பார்க்க முடியும். அதிலும் கூட புதிய கார்களையே பார்க்க முடியும். அங்கு எந்தப் பக்கம் நீங்கள் போனாலும் புத்தம் புதிய கார்களே இருக்கும்..

சிங்கப்பூர்
அங்க என்ன எல்லாருமே பணக்காரர்களா? யாருமே பழைய காரை வைத்திருக்க மாட்டார்களா என்ற கேள்விக்குப் பலருக்கும் வரும். அங்கு வசிக்கும் அனைவரும் பணக்காரர்களா இல்லையா என்பது வேறு விவாதம்.. ஆனால், அங்கு வசிக்கும் பெரும் பணக்காரர்களால் மட்டுமே அங்குக் காரை வாங்க முடியும். காரணம் சிங்கப்பூரின் சட்ட திட்டங்கள் தான்.
சிங்கப்பூர் ஒரு குட்டி நாடு. அதேநேரம் ஜன நெருக்கடி அதிகம். இதனால் அங்கு வசிக்கும் அனைவருமே கார்களை வாங்கினால் டிராபிக் உச்சத்திற்குப் போய்விடும். இதனால் பொது போக்குவரத்தையே அந்நாட்டு அரசு ஊக்குவிக்கும். மேலும், கார் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒரு கடுமையான கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கினர். அதுதான் கார்களுக்கான COE உரிமை சான்றிதழ்!
உரிமம்
அங்கு வசிக்கும் ஒருவர் கார் வாங்க வேண்டும் என்றால் இந்த COE சான்றிதழை ஏலம் எடுக்க வேண்டும். அதற்கே நீங்கள் பெரிய தொகையைச் செலவிட வேண்டும். இந்த உரிமத்தை வாங்க கார் வகையைப் பொறுத்து ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையிலும் செலவாகும். இது காருக்கான தொகை இல்லை.. அந்த உரிமத்தை வாங்குவதற்கான தொகை மட்டுமே!
அடுத்த சிக்கல்
ஆனால், அந்தச் சான்றிதழும் கூட உங்களுக்குச் சரியாக 10 ஆண்டுகளுக்கு மட்டுமே காரை பயன்படுத்தும் உரிமை உங்களுக்கு அளிக்கிறது. 10 ஆண்டுகள் முடிந்த பிறகு அடுத்த சிக்கல் வரும். அதே காரைத் தொடர்ந்து நீங்கள் வைத்திருக்க வேண்டுமானால் Prevailing Quota Premium செலுத்தி உங்கள் சிஓஇ சான்றிதழை 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். இது வழக்கமான சிஓசி சான்றிதழ் ரேட்டை விடவும் அதிகமாகவே இருக்கும். அந்தத் தொகை பல நேரம் பழைய காரின் சந்தை மதிப்பையும் விட அதிகமாக இருக்கும்.
இதுதான் காரணம்
இதன் காரணமாகவே அங்குப் பெரும்பாலான உரிமையாளர்கள் பழைய காரை வைத்திருக்க மாட்டார்கள். பழைய காரை விற்றுவிட்டு புதிய காரை வாங்கிவிடுவார்கள். பழைய கார் இருந்தால் காற்று மாசு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படும். இதனால் சிங்கப்பூர் அரசும் கூட 10 வருடப் பழைய காரை மாற்றுவதையே ஊக்குவிக்கிறது. இதற்காகக் கூடுதல் பதிவு கட்டணத் தள்ளுபடி என்ற திட்டத்தையும் வைத்துள்ளனர். அதாவது பழைய காரை கொடுத்துவிட்டு புது கார் வாங்குவோருக்கு, பழைய காருக்கு செலுத்தப்பட்ட வரியில் பெரும்பகுதி திரும்பக் கிடைக்கும். இதுவே அங்குப் பலரும் கார்களை 10 ஆண்டுகளில் மாற்ற ஊக்குவிக்கிறது.
மேலும், அங்குப் பழைய கார்களுக்கு செலவுகளும் அதிகரிக்கின்றன. கார் 10 ஆண்டுகளைக் கடந்த பிறகு, சாலை வரிகள் 10% முதல் 50% வரை உயர்கின்றன. மேலும், சிங்கப்பூரின் கடுமையான ஆய்வுகள், பராமரிப்பு, எமிஷன் விதிமுறைகளுக்கு ஏற்ப பராமரிக்கவும் வேண்டும். இப்படி 10 ஆண்டு பழைய கார்களுக்கான செலவுகள் அதிகரிப்பதாலேயே அங்குப் பலரும் புதிய கார்களையே வைத்திருக்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications