"ம்மா.. அந்த ஆண்ட்டி என்னை".. கதறிய பிஞ்சு.. 13 வயது சிறுவனிடம்.. 35 வயது பெண் செய்த காரியம்..!
13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த பெண் கைதானார்
சிவகங்கை: 13 வயது சிறுவனை டார்ச்சர் செய்த 35 வயது பெண்ணுக்கு சிவகங்கை கோர்ட்டில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன.. வடமாநிலங்களில் மட்டுமே அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தமிழகத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன.
எவ்வளவுதான் காவல்துறை விழிப்புடன் இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரமான நடவடிக்கையை கையில் எடுத்தாலும், குற்றங்கள் குறையாமலேயே உள்ளன.

பாலியல் தொல்லை
இத்தனைக்கும் போக்சோ சட்டம் அமலில்தான் உள்ளது.. வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் வன்கொடுமை, துன்புறுத்துதல், மிரட்டி அவமதித்தல் இப்படி பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகிறது.. பாலியல் தொல்லையில் இருந்து பெண்களை காப்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் போக்சோ சட்டம்.. ஆனால் பெண்களே போக்சோவில் கைதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

டீச்சர் கைது
ஆண்களின் பாலியல் குற்றங்கள் வெளிப்படையாகவும், உடனடியாகவும் வெளியே தெரிகிறதே தவிர, சில பெண்களின் இதுபோன்ற செயல்கள் வெளியே வருவதேயில்லை.. கடந்த மாதம் இப்படித்தான், திருச்சியில் ஒரு டீச்சர் கைதானார்.. இப்போது இன்னொரு பெண்ணுக்கு தண்டனையையே தந்துள்ளது நீதிமன்றம்... இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது..

செக்ஸ் டார்ச்சர்
சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டி அருகே உள்ள ஆவனி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதய வள்ளி.. 35 வயதாகிறது.. இவர் வீட்டுக்கு பக்கத்திலயே 13 வயது சிறுவன் வசித்து வருகிறான்.. கடந்த சில மாதங்களாகவே 35 வயதான உதய வள்ளி, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது... உதயவள்ளி ஆண்ட்டி தன்னிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்று அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் சொல்லி உள்ளான்.. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக போலீஸில் புகார் தந்தனர்.

உதயவள்ளி
அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அது குறித்து உதவள்ளியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் சரியாக பதில் சொல்லவில்லை.. முன்னுக்குப்பின் முரணாக பதில் தந்தார்.. இறுதியில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை ஜெயிலிலும் அடைத்தனர்.. இந்த வழக்குதான், சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆண்ட்டி
அதில் உதய வள்ளி மீதான குற்றம் உறுதியான நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. பொதுவாக பெண்கள் போக்சோவில் கைதாவதே அதிர்ச்சியை தந்து வரும் நிலையில், 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 35 வயது பெண்ணுக்கு சிறை தண்டனையே கிடைத்துள்ளது, அதைவிட அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications