Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் பற்றி பேச எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கு? “நன்றிகெட்டவர்”: காட்டமாக விமர்சித்த வைத்திலிங்கம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் சந்திப்பை விமர்சனம் செய்யும் தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி என ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் காட்டமாகப் பேசியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி தனியாகச் செயல்பட்டு வரும் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Edappadi palanisamy does not have quality to talk about OPS : says Vaithilingam

இதையடுத்து டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பாக கருத்த தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது, பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் என்றார். மேலும் டிடிவி.தினகரனை ஓபிஎஸ் சந்திக்கும்போது ஓபிஎஸ்ஸுடன் எப்போதும் இருக்கும் 3 பேர் எங்கே? வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகிய 3 பேரும் ஓபிஎஸ்ஸை கைவிட்டுவிட்டனர் எனத் தெரிவித்தார்.

இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பதால் அவர்கள் தனியாகப் பேசட்டும், நாம் செல்ல வேண்டாம் என முடிவு செய்தே நாங்கள் உடன் செல்லவில்லை, துரோகி பழனிசாமிக்கு எங்களை விமர்சிக்கும் தகுதி இல்லை என்றார்.

Edappadi palanisamy does not have quality to talk about OPS : says Vaithilingam

இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய வைத்திலிங்கம், டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பை விமர்சனம் செய்யும் தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி எனக் காட்டமாகக் கூறினார்.

Edappadi palanisamy does not have quality to talk about OPS : says Vaithilingam

மேலும், ஈபிஎஸ்ஸை முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரனும் சசிகலாவும் தான். எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருக்க உறுதுணையாக இருந்தவர் ஓபிஎஸ். இவர்கள் இல்லை என்றால் ஈபிஎஸ் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாகி இருக்கும். ஆனால், நன்றி கெட்ட தனமாக பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆயிரம் எடப்பாடிகள் வந்தாலும் அதிமுகவை வழி நடத்த முடியாது என்றும் விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+