நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்
சிவகங்கை: நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சின்ன மருது, பெரிய மருது என்றழைக்கப்பட்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை தமிழ் மண்ணில் இருந்து விரட்டி அடிப்பதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சுரத்தோடு போர் புரிந்தவர்கள். அக்டோபர் 24-ம் தேதி ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட சின்ன மருது மற்றும் பெரிய மருதுவின் நினைவிடம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ளது.

அங்கு நடைபெற்று வரும் குருபூஜை விழாவில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் இன்று கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு தமிழக அரசு சார்பில் அடையாளச் சின்னம் நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், யாராக இருந்தாலும் பிறர் மனம் புண்படும் படி பேசக்கூடாது என்றும், அவ்வாறு பேசியிருப்பதை ஏற்க முடியாது எனவும் திருமாவளவனை சூசகமாக சாடினார்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி ஏற்கனவே முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இப்போது நாடாளுமன்றத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் கருணாஸ் முன் வைத்துள்ள இந்தக் கோரிக்கையால் பாஜகவுக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications