நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்
சிவகங்கை: நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சின்ன மருது, பெரிய மருது என்றழைக்கப்பட்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை தமிழ் மண்ணில் இருந்து விரட்டி அடிப்பதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சுரத்தோடு போர் புரிந்தவர்கள். அக்டோபர் 24-ம் தேதி ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட சின்ன மருது மற்றும் பெரிய மருதுவின் நினைவிடம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ளது.

அங்கு நடைபெற்று வரும் குருபூஜை விழாவில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் இன்று கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு தமிழக அரசு சார்பில் அடையாளச் சின்னம் நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், யாராக இருந்தாலும் பிறர் மனம் புண்படும் படி பேசக்கூடாது என்றும், அவ்வாறு பேசியிருப்பதை ஏற்க முடியாது எனவும் திருமாவளவனை சூசகமாக சாடினார்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி ஏற்கனவே முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இப்போது நாடாளுமன்றத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் கருணாஸ் முன் வைத்துள்ள இந்தக் கோரிக்கையால் பாஜகவுக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications