திருமணத்திற்கு வந்தால் குவாட்டர்,சிக்கன் இலவசம்.. ஆனால் ஆதார் கட்டாயம்! சர்ச்சையை கிளப்பிய இளைஞர்கள்
சிவகங்கை: சிவங்களையில் நடைபெற்ற திருமண விழாவுக்கு வந்தவர்களில் திருமணம் ஆனவர்களுக்கு ஒரு குவாட்டரும், திருமணம் ஆகாதவர்களுக்கு இரண்டு குவாட்டரும் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஒரு திருமணத்திற்கு வருபவர்களுக்கு பொதுவாக நன்கு உணவு பரிமாறி, தாம்பூல பையை வழங்குவார்கள். ஆனால். சிவகங்கை அருகே நடந்த ஒரு திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டார் அளித்த பொருள் விவாதமாகியுள்ளது.
மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு
அதாவது திருமணத்துக்கு வந்தவர்களில் திருமணம் ஆனவர்களுக்கு ஒரு குவாட்டரும், திருமணம் ஆகாதவர்களுக்கு இரண்டு குவாட்டரும் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறிவிப்பு
சிவகங்கை அருகே கீழகண்டனி கிராமத்தில் ஜெயமுத்து, சரண்யா ஆகியோர் திருமண வரவேற்பு பிளக்ஸ் போர்டில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்று பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தனர். மேலும் அதில் திருமணம் ஆனவர்கள் என்றால் ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசமாகக் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
ஆதர் கட்டாயம்
குறிப்பாக மதுபானத்தை வாங்க ஆதார் கார்டு கட்டாயம் என்றும் அவர்கள் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த அறிவிப்பு அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், சும்மா பரபரப்பை ஏற்படுத்தவே இப்படி பிளக்ஸ் போர்டை வைத்துள்ளனர் என்றே அனைவரும் பலரும் கருதினர். இந்தச் சூழலில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதார் கார்டை வாங்கி, வயதை செக் செய்துவிட்டு மதுபானத்தை கொடுத்து ஷாக் கொடுத்துள்ளனர் மாப்பிள்ளை வீட்டார்.
விளக்கம்
மேலும் குவாட்டர் வேண்டாம் சொல்லுபவர்களுக்கு பீரை கொடுத்து உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் சிலர் கூறுகையில், "இப்போது கல்யாணம், காதுகுத்து உட்பட அனைத்து விழாக்களும் மது இல்லாமல் இல்லை என்று ஆகிவிட்டது. இங்குத் திருமணத்திற்கு வருவோர் மது வாங்க வேண்டும் என்றால், மானாமதுரை வரை சென்று மது வாங்கி வர வேண்டும். இது அவர்களுக்கும் சிக்கல். இதனால் தான் நாங்களே திருமணத்திற்கு வருவோருக்கு மது கொடுக்க முடிவு செய்தோம்" என்றனர்.
யாருக்கு
மது அருந்துபவர்களுக்கு மட்டும் குறிப்பாக 35வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது கொடுக்கப்பட்டது என்றும் ஆதார் கார்டுடன் வந்தவர்களுக்கு மட்டுமே வயதை செக் செய்து மது கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், யாரையும் வற்புறுத்தி மது கொடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இவர்களின் இந்த செயல் திருமணத்திற்கு வந்த மது குடிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், திருமணம் போன்ற நல்ல நாளில் மதுவைக் கொடுப்பது தவறான முன்னுதாரணம் என்றும் இது மது குடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் பலரும் சாடியுள்ளனர்.