ஹவுஸ் ஓனர் கொடுத்த ஓயாத தொல்லை.. 3 குழந்தைகளுடன்.. விஷம் குடித்த பிரியா.. தேவகோட்டை பரிதாபம்!
ஹவுஸ் ஓனர் தந்த தொல்லையால் பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்
சிவகங்கை: ஹவுஸ் ஓனர் ஓயாமல் கொடுத்த தொல்லையால் பிரியா விஷம் குடித்து விட்டு இறந்தே விட்டார்.. இறந்தவர் தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் அதே விஷத்தை தந்துவிட்டார்.. அந்த குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன.. இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்... இவர் 4 மாசத்துக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார்.. இவரது மனைவி பிரியா.. 36 வயதாகிறது.. பர்வதவர்த்தினி 16, நீலகண்டன் 15, ஜெய்ஹரிகிருஷ்ணன் 11 ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

இறந்துபோன ராமதாசின் பெரியம்மா வசந்தி என்பவர் வீட்டில்தான் இவர்கள் குடியிருந்தனர்.. ஆனால் ராமதாஸ் இறந்துவிடவும், பிரியாவை காலி செய்ய ஹவுஸ் ஓனர் சொல்லி உள்ளார்.. குழந்தைகளை வைத்து கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் பிரியா விழி பிதுங்கி தவித்துள்ளார். இதில்தான் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்தது.
இதனிடையே, வசந்தியின் தம்பியும், பிரியாவிடம் தகராறு செய்து அவரை தாக்க முயன்றதாகவும் தெரியவருகிறது... இதனால் மனவருத்தம் அடைந்த பிரியா, 3 பிள்ளைகளுக்கும் காபியில் எலி மருந்தை கலந்து கொடுத்தார்.. அம்மா காபி தருகிறார் என நினைத்து 3 பேருமே அதை வாங்கி குடித்துவிட்டனர்.. பிறகு அந்த காபியை பிரியாவும் குடித்துவிட்டார்.. 4 பேருமே ஒரே வீட்டில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
இவர்கள் உயிருக்கு போராடியதை அறிந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அனைவரையும் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. ஆனால் பிரியா இறந்துவிட்டார்.. 3 குழந்தைகளுக்கும் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இப்போதுமே 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. தேவகோட்டை நகர் போலீசார் இதை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications