உரிமைத்தொகை ரூ.1,000 ஆண்களுக்கும் வரப்போகிறதா? தமிழக அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்.. எப்போ? செம சர்ப்ரைஸ்
சிவகங்கை: மகளிர் உரிமை திட்டம் பெண்களின் அமோக ஆதரவை பெற்றுவரும் நிலையில், மற்றொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்ன?
பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனில் தமிழக அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. காலை உணவுத்திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்துமே மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது.

மகளிர் திட்டம்: குறிப்பாக, கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்று கொண்டிருக்கிறார்கள்.. கடந்த நிதியாண்டில் மட்டும் 2,09,365 மாணவியர்களும், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகளும் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்களும் பயனடைந்துள்ளனர்.
அந்தவரிசையில் தற்போது அறிமுகமாகியிருக்கும் திட்டம்தான், "தமிழ்ப்புதல்வன்" திட்டமாகும்.. பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ள நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நேற்றைய தினம் கோவை அரசு கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின், தொடங்கி வைத்துள்ளார்.
விமர்சனம்: இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தினை கூறி, விமர்சித்து வருகின்றன.. ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை குறித்தும், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.. மகளிர் அனைவருக்கும் 1000 ரூபாய் தருவோம் என்று சொல்லிவிட்டு, "தகுதி வாய்ந்த" பெண்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்? "தகுதி" என்று எதை வைத்து மதிப்பிடுகிறீர்கள்? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. அத்துடன் அனைத்து மகளிருக்குமே 1000 ரூபாய் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் வருகிறார்கள்.
அதேசமயம், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டமானது, பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.. தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும், திமுகவின் அபார வெற்றிக்கு முக்கிய காரணியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெரியகருப்பன்: இந்நேரத்தில் இன்னொரு மகிழ்ச்சி தகவலை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர், "தமிழ்நாட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த தொகை சென்று சேரும் என்பதால் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்யவும் தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது" என்றார். அப்போது செய்தியாளர்கள், "பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்குவது போன்று ஆண்களுக்கும் வழங்கப்படுமா" என்று கேட்டார்கள்..
மகிழ்ச்சி: அதற்கு அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், "திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையினை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த உரிமைத் தொகை தங்களுக்கு இல்லையே என்ற ஆண்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரும்" என்றார்.. இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications