மீனு மீனேய்.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளி துள்ளி வந்து.. அதென்ன அண்டாவில்?
சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதை பார்த்த பலரும் சிலிர்ப்பில் ஈடுபட்டு விட்டார்கள்.
விநோத திருவிழாக்கள் என்பது இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது.. பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் நம் மாநிலத்தில் நடத்தப்படுவதுண்டு.

குறிப்பாக, சித்திரை திருவிழாவின்போது, பல்வேறு கோயில்களில் இதுபோன்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் நடத்தி வருகிறார்கள்.. இதுபோன்ற திருவிழாக்களில், ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படுவது கூடுதல் ஸ்பெஷலாகும்.. நள்ளிரவு நேரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு துவங்குவதுடன், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகளை பலியிடுவார்கள்.
கறிவிருந்து: பிறகு, விடிய விடிய கறிவிருந்து தயாராகும். காலையில், இந்த கறிவிருந்தினை சுவாமிக்கு படையல் போட்டு, பிறகு, விழாவில் பங்கேற்றவர்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும். பெரும்பாலும் விவசாயம் செழிக்கவும், மழைவேண்டியும், இவ்வாறான நடத்தப்படுகின்றன.
இன்றுகூட, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரு திருவிழா நடந்துள்ளது.. திருப்பத்தூர் பக்கத்தில் துவார் என்ற கிராமம் உள்ளது.. இந்த மக்களின் பிரதான தொழில் மீன்பிடிப்பது..
மழை வேண்டி: எனவே, வருடா வருடம் மழை கிடைக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, இங்கிருக்கும் வள்ளிக் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கமாகும். குறிப்பாக, நெல் அறுவடைக்கு பிறகு, கோடைகாலத்தில் இந்த திருவிழா நடத்துவார்கள்..
அந்தவகையில், இந்த வருடத்துக்கான திருவிழா இன்று நடைபெற்றது.. மீன்பிடி திருவிழா என்பதால், சுற்று வட்டார கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் துவார் கிராமத்திற்கு திரண்டு வந்துவிட்டார்கள்.. காலையிலேயே வள்ளி கண்மாயை சுற்றிலும் நின்று அனைவரும் மீன்பிடிக்க தயாரானார்கள். மீன்பிடிப்பதற்கு தேவையான வலை உட்பட பல்வேறு உபகரணங்களையும் கையில் தயாராக வைத்திருந்தார்கள்.
கண்மாய்கள்: ஊர் பெரியவர்களும், வெள்ளைக்கொடியை அசைத்து, மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். கொடி அசைத்துமே, மொத்த பேரும், கண்மாய்க்குள் தாவி குதித்து, மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடிக்க ஆரம்பித்தார்கள்..
கண்மாயில் இறங்கிய கொஞ்ச நேரத்திலேயே வகை வகையான மீன்களை அள்ளினார்கள்.. கட்லா, விரால், ஜிலேபி, அயிரை, கெண்டை இப்படி ஏகப்பட்ட மீன்களை கூடை கூடையாக கொண்டு வந்து கரையில் கொட்டினார்கள்.. பிறகு, இந்த மீன்களை மூட்டைகளிலும், பெரிய பெரிய அண்டாவிலும் பொதுமக்கள் அள்ளிக் கொண்டு போனார்கள்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications