Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜித் குமார் வழக்கு! வீடியோ எடுத்த நண்பர் சத்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்த வழக்கில், அவரை போலீஸார் தாக்கியதை மறைந்திருந்து வீடியோ எடுத்த அவருடைய நண்பர் சத்தீஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீஸார் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய சம்பவத்தை அவருடைய நண்பர் சத்தீஸ்வரன் வீடியோவாக எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த வீடியோ இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவும் என நம்பப்படுகிறது. அதுபோல், அஜித் குமாரை அழைத்து வந்ததும் என்ன நடந்தது என்பது குறித்து அங்கிருந்த சில விசாரணைக் கைதிகள் சாட்சி அளித்துள்ளனர்.

ajith kumar sivagangai

சத்தீஸ்வரனுக்கு அச்சுறுத்தல்

இந்த நிலையில், சத்தீஸ்வரனுக்கும் அந்த சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாததால் சத்தீஸ்வரன், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தென் மண்டல ஐஜி

அந்தக் கடிதத்தின் பேரில், தென் மண்டல ஐ.ஜி. உத்தரவின்படி, ராமநாதபுரத்தில் இருந்து இரு ஆயுதமேந்திய போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

அஜித் குமார் மரணத்தின் பின்னணி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த 27 வயது இளைஞர் அஜித் குமார், காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு "லாக்-அப் மரணம்" என்று பரவலாகக் குறிப்பிடப்பட்டு, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

நிகிதா புகார்

கடந்த ஜூன் 28ஆம் தேதி, நிகிதா என்ற பெண்மணி தனது வயதான தாயுடன் மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். கோயிலுக்குச் சென்ற பிறகு, தனது காரில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் காணாமல் போனதாகத் தெரிவித்து, கோயிலின் தற்காலிக காவலாளி அஜித் குமார் மீது சந்தேகம் தெரிவித்துப் புகார் அளித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கை எங்கே

நிகிதாவின் புகாரின் பேரில், திருப்புவனம் தனிப்படை போலீஸார் அஜித் குமாரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், இந்தப் புகாரின் மீது எந்த ஒரு முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படாமலேயே அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடும் தாக்குதல்

காவல் நிலையத்தில் வைத்து அஜித் குமாரை போலீஸார் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அஜித் குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், போலீஸாரின் தாக்குதலால் அவர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதல் வீடியோ

அஜித் குமாரை போலீஸார் பைப்பால் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ அஜித் குமார் மரண வழக்கின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஜித் குமாரின் உடலில் 40க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபிசிஐடி

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த சிறப்புப் படைகளை (தனிப்படைகள்) கலைத்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இனி துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டி.எஸ்.பி.க்கள் ஆகியோர் தங்களுக்கு கீழ் பணியாற்ற தனிப்படை அமைப்பதற்கு மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+