பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கார் மீது கல்வீச்சு.. டீக்கடையில் நின்றவரை ரவுண்டு கட்டிய 50 பேர்!
சிவகங்கை : பா.ஜ.க சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கார் மீது 50க்கும் மேற்பட்டோர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிலர் வேலூர் இப்ராஹிம் கார் மீது 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தினர்.
“திமுக அமைச்சர்கள் பீதியில இருக்காங்க.. ராமதாஸே மிரண்டுட்டாரே..” - வேலூர் இப்ராஹிம் பரபர பேட்டி!
இதனால் அதிர்ச்சியடைந்த வேலூர் இப்ராஹிம் போலீசில் புகார் அளித்தார். பின்னர், போலீசாரின் பாதுகாப்புடன் ராமநாதபுரம் சென்றார்.
புதுக்கோட்டையில் வேலூர் இப்ராஹிம்
காமராஜரின் 120வது பிறந்தநாளையொட்டி, புதுக்கோட்டை பா.ஜ.க அலுவலகத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்திற்கு பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இளையான்குடி
பின்னர், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் புதுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்குச் சென்றார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வழியாக காரில் ராமநாதபுரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது இளையான்குடி புறவழிச்சாலையில் சிலர் அவரை நுழையவிடாமல் தடுத்ததால் அங்குள்ள ஒரு பேக்கரியில் டீ குடிப்பதற்காக காரை நிறுத்தி இறங்கினார்.
கல்வீசி தாக்குதல்
அப்போது இளையான்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் வேலூர் இப்ராஹிமின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். திடீரென சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் வேலூர் இப்ராஹிமின் கார் கண்ணாடி உடைந்தது. அவருடன் வந்த பா.ஜ.க.வினர் சிலரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
இந்தச் சம்பவம் குறித்து வேலூர் இப்ராஹிம் சாலை கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் எஸ்.பி செந்தில்குமார் ஆய்வு செய்தார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் இப்ராஹிம் ராமநாதபுரம் சென்றார்.