மனசு சிஎஸ்கே-னு சொல்லுது.. மூளை ஆர்சிபி-னு சொல்லுது.. கடைசியாக அஸ்வின் சொன்ன மேட்டர்!
பெங்களூர்: ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் யார் வெல்வார்கள் என்ற கணிப்பை கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் கணித்துள்ளார். ஆர்சிபி அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் அடைந்துள்ளதாக கூறிய அஸ்வின், சிஎஸ்கே அணி அகீல் ஹொசைனை சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
பெங்களூரில் இன்று இரவு நடக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக இந்த இரு அணிகளுக்கும் இடையில் நடந்த 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியும் ஒரு டிரான்ஸிசனில் இருப்பதால் ரசிகர்கள் சோர்வடைந்துள்ளனர்.

ரசிகர்களை மீண்டும் உற்சாகம் அடைய வைக்க வேண்டும் என்றால், ஆர்சிபி அணியை வீழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆர்சிபி அணியிலும் ஹேசல்வுட், யாஷ் தயாள் ஆகியோர் காயம் மற்றும் சொந்த பிரச்சனைகள் காரணமாக விளையாடவில்லை. அதேபோல் க்ருணால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோரும் ஃபார்மில் இல்லை.
மறுபக்கம் சிஎஸ்கே அணியில் பவுலர்கள் போதுமான பலத்துடன் இல்லை. இதுதொடர்பாக அஸ்வின் பேசுகையில், ஆர்சிபி அணி தான் வெல்லும் என்று சொல்ல முடியவில்லை. நான் கொஞ்சம் சிஎஸ்கே அணிக்கு சாதகமாகவே இருப்பேன். அதில் எனக்கு எந்த கூச்சமோ, வெக்கமோ இல்லை. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெல்லும் என்று மனசு சொல்கிறது.
ஆனால் மூளை ஆர்சிபி வெல்லும் என்று சொல்கிறது என்று கூறியுள்ளார். அதேபோல், ருதுராஜ் கெய்க்வாட் அவ்வளவு மோசமாக கேப்டன்சி செய்யவில்லை. ஏனென்றால் சிஎஸ்கே அணியில் இருக்கும் பவுலர்கள் அனைவருமே ஓவருக்கு 10 ரன்கள் கொடுக்கிறார்கள். ஒரு திட்டத்துடன் பந்தை பவுலர்கள் கையில் கொடுத்தால், அதனை செயல்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்றும் ஆதரவாக பேசியுள்ளார்.
-
ஒரு காலத்துல சிஎஸ்கே எப்படி இருந்த டீம் தெரியுமா.. ரொம்ப வருத்தமா இருக்கு.. புலம்பி தள்ளிய அஸ்வின்! -
எப்படியாவது ஜெயிச்சிடனும்..! RCB உடன் டீல் போட்ட பிக் பேஸ்கட்.. டாடா குழுமத்தில் தனி கதை! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications