எடுபடாத ஸ்டேடர்ஜி.. அக்சர் படேலை ஏன் டீமில் சேர்க்கல? இந்திய அணி நிர்வாகத்தை விளாசிய அஸ்வின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில், அணித்தேர்வில் இந்திய அணி நிர்வாகம் சொதப்பியதாக கிரிக்கெட் விமர்சர்கள் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் வீரர் அஸ்வினும் இதே விஷயத்தை முன்வைத்து இருக்கிறார். அக்சர் படேலுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து காட்டமாக பேசியுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று தொடங்கிய நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்க அணி இடையேயான போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

Ashwin Questions indian Team Management Over Axar Patel s Omission

76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தொடர்பாக முன்னாள் வீரர்கள், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்திய அணி, வீரர்கள் தேர்வில் கோட்டை விட்டதாகவும், முக்கியமான மேட்சில் இந்திய அணியின் யுக்தி எடுபடவில்லை என்று விமர்சித்து வருகிறார்கள்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வினும் அக்சர் படேலை அணியில் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது ஏன்? என்று காட்டமாக பேசியுள்ளார். தனது யூடியூப் சேனலில் அஸ்வின் இது தொடர்பாக கூறியதாவது:

2024 உலக கோப்பை தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் நெருக்கடியான ஒரு கட்டத்தில் விராட் கோலியுடன் அக்சர் படேல் கை கோர்த்தார். 170-க்கு மேலே போயிட்டாங்க.. தென் ஆப்பிரிக்கா அணி போட்டியை வெற்றி பெற்று இருக்க வேண்டியது. ஆனால், சிறப்பாக நெருக்கடியை கையாண்டு வெற்றியை தேடி தந்தனர்.

அக்சர் படேல் மாதிரி ஒரு பிளேயர் 24 கேரட் கோல்டு இன்வெஸ்ட்மெண்ட் மாதிரி.. ஜடேஜாவோ அக்சேர் படேல் மாதிரி பிளேயர் இருக்கும் போது அவர்களை வெளியில் உக்கார வைப்பது எந்த அளவு சரியான முடிவு என்று தெரியவில்லை. பிரேவிஸ் வந்த ஒரே காரணத்திற்காக வாஷிங்டன் சுந்தர் ஓவரே போடவில்லை.

ஒரு பவுலரை எடுத்துட்டு அந்த பவுலரை யூஸ் பண்ணவே இல்லை என்றால் .. பவுலர் தனது திறமையை வெளிப்படுத்த ஏன் அனுப்புவது இல்லை. அக்சர் படேலுக்கு அணியில் இடம் கொடுக்காதது நியாயமற்றது. அக்சர் படேலை வெளியில் உக்கார வைத்தது துரதிர்ஷ்டவசமானது. யானை தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் என்று சொல்வார்களே இது அது அந்த மாதிரி சூழ்நிலைதான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+