சிஎஸ்கே அணியால் கம்பேக் கொடுக்க முடியுமா? கேப்டன் ருதுராஜ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலமாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே அணி பெற்றுள்ள நிலையில், இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனில் மோசமான தோல்வியை பெற்று வருகிறது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த வெற்றியை பெற்றாலும், அடுத்ததாக விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதில் சொந்த மண்ணிலேயே 2 தோல்விகளை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிஎஸ்கே-க்கு சவால்
இந்த நிலையில் அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி வலிமை வாய்ந்த பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. பஞ்சாப் அணியின் சொந்த மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த 3 போட்டிகளாகவே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பல்வேறு மாற்றங்களை பிளேயிங் லெவனில் செய்து வருகிறார்.
தொடக்க வீரராக ருதுராஜ்
ஆனாலும் நம்பர் 3ல் களமிறங்குவதை மட்டும் ருதுராஜ் கெய்க்வாட் மாற்றிக் கொள்ளவில்லை. ஏனென்றால் மெகா ஏலத்தின் போதே ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3ல் களமிறங்குவார் என்று முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஃபிளமிங் கூட்டணி மாற்று திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
4 போட்டிகளிலும் சொதப்பல்
அதன்படி வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த 4 போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் 2 ஓவர்களுக்குள் களத்திற்கு வந்துவிடுகிறார். இதற்கு அவர் தொடக்க வீரராக களமிறங்கி சிஎஸ்கே அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
அதேபோல் சிஎஸ்கே அணியில் தொடந்து சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், சில ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து முயற்சிக்க வேண்டும். டெல்லி பிரீமியர் லீக் தொடரில் நிரூபித்த வன்ஷ் பேடி, நீண்ட ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் இருக்கும் ஷேக் ரஷீத் உள்ளிட்டோரை பயன்படுத்தி சோதனை செய்யலாம்.
6 பவுலர்கள் தேவையா?
அதுமட்டுமல்லாமல் 6 பவுலர்களுடன் களமிறங்காமல் ஒரு ஸ்பின்னரை வெளியில் அமர வைத்து கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்கி விளையாடலாம். டெல்லி அணியுடனான போட்டியில் முகேஷ் சவுத்ரி வீசிய 4 ஓவர்களை அஸ்வின், ஜடேஜா மற்றும் நூர் அஹ்மத் ஆகிய 3 பேரால் வீசியிருக்க முடியும். இதனால் முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வந்திருந்தால், சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
பீல்டிங் பயிற்சி செய்த சஞ்சு சாம்சன்.. அப்போ விக்கெட் கீப்பர் தோனி தானா? சிஎஸ்கே கொடுத்த சிக்னல்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications