சொந்த ஊர் பாசம்.. ஆயுஷ் பதோனியை தேர்வு செய்ய இதுதான் காரணமா? கம்பீரின் பக்குவமற்ற முடிவு!
மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டெல்லி மாநில கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகி இருக்கும் சூழலில், அக்சர் படேல் அல்லது ரிங்கு சிங் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஆயுஷ் பதோனியை கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்ற சூழலில், 2வது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதனிடையே இந்திய அணியின் 2 வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர்.

ஏற்கனவே ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகிய பின், அவரது இடத்தில் துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் காயத்தால் விலகிய சூழலில், திடீரென ஆயுஷ் பதோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தரின் இடத்திற்கு ஷாபாஸ் அஹ்மத், நிதீஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் உள்ளிட்டோர் விளையாட தயாராகி வருகின்றனர்.
அதேபோல் அக்சர் படேல் மிகப்பெரிய அனுபவத்துடன் இருக்கிறார். ஆனால் ஆயுஷ் பதோனி ஏன் சேர்க்கப்பட்டார் என்று ரசிகர்கள் புரியாமல் இருக்கின்றனர். இதனால் கவுதம் கம்பீர் தன்னுடைய ஃபேவரைட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் ஆயுஷ் பதோனி தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே தொடரிலும் கூட சிறப்பாக ரன்கள் சேர்க்கவில்லை.
டெல்லி அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 16 ரன்கள், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது மாநிலமான டெல்லி அணிக்கு ஆடி வரும் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த ஹர்சித் ராணாவுக்கு அதிக வாய்ப்புகளை கம்பீர் அளித்து வருகிறார்.
இவர் கம்பீர் உடன் கேகேஆர் அணிக்காகவும் விளையாடியவர். அதேபோல் ஆயுஷ் பதோனியும் டெல்லி அணிக்காக விளையாடி வருவதோடு, கம்பீர் ஆலோசகராக இருந்த லக்னோ அணிக்காக விளையாடி வருபவர். இதனால் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி இந்திய அணியை தங்களின் ஃபேவரைட் வீரர்களை கொண்டு உருவாக்குவதாக குரல்கள் எழுந்துள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications