ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டாரா? மும்பை அணி கொடுத்த அப்டேட்!
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. நேற்றே ஹர்திக் பாண்டியா பயிற்சிக்கு திரும்பிவிட்டதாக கூறிய பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே, மும்பை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடுகிறது. கடந்த போட்டியில் டெல்லி அணியுடன் மும்பை அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு ஹர்திக் பாண்டியாவின் காயமும் முக்கிய காரணமாக அமைந்தது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியதால், மும்பை அணியின் பிளேயிங் லெவனில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டது.

இதனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலாவது ஹர்திக் பாண்டியா களமிறங்குவாரா என்ற கேள்வி அந்த அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே பேசுகையில், ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் ஆடுவார். நேற்று சுமார் 2 மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
சில நேரங்களில் வீரர்கள் காயம் அடையும் போது அணியில் மாற்றங்கள் ஏற்படும். அதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மும்பை அணியில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். யாருக்கு காயம் அடைந்தாலும் அவர்களின் இடத்தை நிரப்ப வீரர்கள் உள்ளனர். அதேபோல் சில போட்டியில் சூழலை பொறுத்தும் முடிவுகள் எடுக்கப்படும்.
ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார் என்று யாருக்கும் சந்தேகம் இருந்திருக்காது என்று நம்புகிறேன். அதேபோல் மும்பை அணிக்காக ரோகித் சர்மா ரன்கள் சேர்ப்பதை ஒருநாளும் போனஸாக பார்க்க மாட்டோம். ரோகித் சர்மாவால் அணிக்கு எந்த மாதிரியான பாசிட்டிவ் விஷயங்களை கொண்டு வர முடியும் என்பதை கவனிக்கிறோம்.
ரோகித் சர்மாவிடம் அவ்வளவு அனுபவம் இருக்கிறது. பவுலர்களிடம் சில ஆலோசனைகளை வழங்க முடியும். சில திட்டங்களை செயல்படுத்த முடியும். ரோகித் சர்மாவை வெறும் பேட்ஸ்மேனாக சுருக்கிட முடியாது. இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா விளையாடி இருக்கிறார். அதில் என்ன மாதிரி ஆடுவார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications