திக்கி திணற வைத்த ஷர்த்துல்.. மின்னல் வேகத்தில் பாய்ந்த ஸ்ரீகர்.. அரண்ட ஆஸி.. பின்னணியில் தோனியாமே!
லண்டன்: டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. பிட்ச் அதிக புற்களோடு பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

இதனால் பவுலிங்கிற்கு.. முக்கியமாக பாஸ்ட் பவுலிங்கிற்கு ஆதரவாக பிட்ச் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு உதவாது என்பதால் ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.
அந்த வீரர் ஜடேஜா. இந்திய அணியில் இந்த முறை அஸ்வின் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நம்பர் 1 ஸ்பின் பவுலராக இருந்தும் கூட அவர் அணியில் எடுக்கப்படவில்லை. காரணம்.. ஜடேஜாவிடம் பேட்டிங் ஆப்ஷனும் உள்ளது.
இந்திய அணியில் இன்று ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத் (வி.கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வாரம்), பாட் கம்மின்ஸ் (கேட்ச்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆட்டம்: தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டிற்கு 103 ரன்களை இழந்து ஆடி வருகிறது. இன்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் பவுலிங் இன்று மிகவும் சிறப்பாக உள்ளது.
முதல் செஷன் முழுக்க இந்திய அணி இரண்டு பாஸ்ட் பவுலர்கள்.. சிராஜ் - ஷமி ஆகியோரை மட்டுமே பயன்படுத்தியது. இவர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான பிரஷர் கொடுத்தனர். முதல் செஷன் முடிந்த பின் இந்திய அணி சார்பாக ஷர்த்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் பவுலிங் செய்தனர்.
இதில் முக்கியமாக ஷர்த்துல் தாக்கூர் ஓவர் சிறப்பாக இருந்தது. இவர் ஓவரில் அடிக்கடி வார்னர் திணறினார். அஸ்வினுக்கு பதில் இவரை ஏன் எடுத்தார்கள் என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பவுலிங் செய்தார்.
அதன்படியே ஷர்த்துல் பந்தில் கீப்பர் ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் வார்னர். இதில் ஸ்ரீகர் பரத் பாய்ந்து வந்து கேட்ச் பிடித்தது பெரிய அளவில் கவனம் பெற்றது. அவரின் கீப்பிங் இன்று சிறப்பாக இருந்தது. ஐபிஎல்லின் போது தோனியிடம் சிறப்பு ஆலோசனைகளை ஸ்ரீகர் பரத் பெற்றார்.
அதில்.. டெஸ்ட் போட்டிகளில் கீப்பரின் செயல் முக்கியம். 90 ஓவர்கள் போடுகிறாரக்ள் என்றால் எல்லா பந்திலும் கீப்பர் கவனமாக இருக்க வேண்டும். அதனால் பின்பக்கம் இருக்கும் போது கூடுதல் கவனத்துடன் இரு என்று தோனி ஆலோசனை வழங்கி உள்ளார். அவர் சொன்னபடியே இன்று மிகவும் கவனமாக இருந்த ஸ்ரீகர் சிறப்பாக கீப்பிங் செய்ததுடன் 2 கேட்சும் பிடித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications